Friday 1 September 2006

துவக்கம்

அளவிலா அருளாளனும் இணையிலா அன்பாளமானுகிய இறையைப் போற்றி....

இந்த வருடம் ஆரம்பத்திலிருந்து தமிழ் வலைப்பூக்கள் அறிமுகம் ஆனது. யாரோ நண்பர் ஈ-மெயிலில் அறிமுகப்படுத்தியிருந்தார். யார் என்று நினைவில் இல்லை. அதன்பின் வலைப்பூக்களை பார்வையிடுவது தினப்படி வழக்கமானது. ஊர் (தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள இலப்பைக்குடிக்காடு) போயிருந்த ஒரு மாதத்தைத் தவிர.

எழுதிப் பழக்கமில்லை. பிடித்த மற்றும் பிடிக்காத பதிவுகளுக்கு பின்னூட்டம் மட்டும் இட்டுக் கொண்டிருக்கிறேன். இனி நானும் பதியலாம் என்றிருக்கிறேன். எனக்குப் பிடித்ததும், பிடிக்காததும், படித்ததும், படிக்க விரும்புவதும் இன்னும் என்னவெல்லாமோ.

இயன்றால் சீரியஸான(!!!!) பதிவுகளும் போடுவேன். ஆனால் பதிவு போடுவதைப் பற்றி தெளிவான விபரம் இல்லை. இவ்வுலகில் மற்றவர்களால் செய்ய முடிந்த ஒன்றை முயன்றால் நம்மால் முடியாது போகுமா என்ன? இல்லையென்றால் சீனியர் பதிவர்களை துணைக்கழைப்பதுதான்.

Post Comment