Tuesday 19 March 2013

மெயிலில் வந்த சர்தார்ஜி கதை.


லண்டனிலிருந்து இரண்டு பாகிஸ்தானிகள் விமானத்தில் பயணம் செய்ய வந்தனர். ஒருவர் ஜன்னலோர இருக்கையிலும் மற்றவர் அதற்கடுத்த நடு இருக்கையிலும் அமர்ந்து கொண்டனர். விமானம் புறப்படும் நேரத்தில் ஒரு சர்தார்ஜி பாதையோர இருக்கையில் (ஐஸ்ல்) வந்தமர்ந்தார்.

விமானம் டேக்ஆப் ஆகி பறக்கத் துவங்கியவுடன் சர்தார்ஜி தன் ஸூவை கழற்றி விட்டு விட்டு காலாட்டிக் கொண்டு வசதியாக இருக்கையில் சாய்ந்தார். ஜன்னலோர பாகிஸ்தானி, 'நான் எழுந்து போய் ஒரு கோக் வாங்கி வர வேணடும்' என்றார்.

சர்தார்ஜி, 'நீங்கள் எழ வேண்டாம். நான் போய் வாங்கி வருகிறேன்' என்று எழுந்து போனார். அவர் எழுந்து போன உடனே அந்த பாகி சர்தார்ஜியின் ஒரு ஸூவை எடுத்து அதில் எச்சிலை நன்றாக துப்பி வைத்து விட்டார்.

சர்தார்ஜி கோக்கை கொடுத்து விட்டு இருக்கையில் அமர்ந்ததும் அடுத்த பாகி, 'எனக்கும் ஒரு கோக் தேவைப்படுகிறதே' என்றார். சர்தார்ஜி அவருக்காக கோக் வாங்கி வர எழுந்து போனார். அவர் எழுந்து போனதும் இந்த பாகி யும் சர்தார்ஜியின் இன்னொரு ஸூவை எடுத்து அதில் எச்சிலை நன்றாக துப்பி வைத்தது.

பயணம் முடிந்து, விமானம் தரையிறங்கியதும், சர்தார்ஜி தன் ஸூவுக்குள் காலை நுழைக்கவும் என்ன நடந்திருக்கிறது என புரிந்து விட்டது. சர்தார்ஜி இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து, தன் சக பயணிகளான பாகி களிடம்,

இது ஏன் நமக்குள் இன்னமும் இப்படியே இருக்கிறதென தெரியவில்லை!

இன்னும் எவ்வளவு நாளுக்குத்தான் இது இப்படியே தொடருவது?

நமது நாட்டிற்கிடையில் பகைமையும் போரும்.......?

இந்த மாதிரி வெறுப்பும்...?

இத்தகைய குரோதமும்...?

ஸூவுக்குள் எச்சில் துப்பி வைப்பதும்,,,,?

கோக்குக்குள் மூத்திரம் பெய்து கொடுப்பதும்...? 

Post Comment

Thursday 14 October 2010

பொம்மை - ஒரு நெஞ்சுருகும் நிகழ்வு

பெரிய கடைத்தெருவில் ஏதோ சாமான் வாங்க போயிருந்தேன். ஒரு கடையில் ஒரு ஐந்தாறு வயது மதிக்கத்தக்க சிறுபையனிடம் அந்தக் கடையின் கேஷியர் விவாதம் செய்து கொண்டிருந்தார். 'இந்த பொம்மையை வாங்குவதற்கு உன்னிடம் உள்ள காசு போதாது தம்பீ.'

அந்தப் பையன் என் பக்கம் திரும்பி 'என்னிடம் இருக்கும் இந்தக் காசுகள் நிச்சயம் பத்தாதா மாமா?' என்று கேட்டான். நான் அந்தக் காசுகளை வாங்கி எண்ணிப் பார்த்துவிட்டு, 'இது அந்த பொம்மை வாங்க பத்தாதய்யா' என்றேன். ஆனாலும் அந்தப் பையன் பொம்மையை கீழே வைக்கவில்லை.

நான் அந்தப்பையன் அருகில் சென்று 'நீ இந்த பொம்மையை யாருக்காக வாங்கப் போகிறாய்?' என்று கேட்டேன். 'இந்த பொம்மையை என் தங்கை மிகவும் விரும்பி தனக்காகக் கேட்டாள். நான் இதை அவள் பிறந்த நாளுக்காக பரிசளிக்கப் போகிறேன்' என்றான். 'நான் இதை என் மம்மியிடம் கொடுத்து விடுவேன். என் மம்மி என் தங்கையிடம் போகும்போது கொடுத்து விடுவார்கள்' என்றான். அதைச் சொல்லும்போது அவன் கண்களில் அப்படியொரு சோகம். 'என் தங்கை கடவுளிடம் போய் விட்டாள். எங்க டாடி சொன்னாங்க எங்கம்மாவும் சீக்கிரம் கடவுளிடம் போயிடுவாங்களாம். அதனால்தான் மம்மியிடம் கொடுத்தால் என் தங்கையிடம் கொடுத்திருவார்கள்' என்றான்.

என் இதயம் செயலிழந்து விட்டதைப்போல் உணர்ந்தேன். அந்தப் பையன் என்னைப் பார்த்து 'எங்க டாடியிடம் மம்மியை நான் கடைக்கு போயிட்டு வருவதற்குள் போக வேண்டாம்னு சொல்லுங்க என்று சொல்லி விட்டு வந்திருக்கிறேன்' என்றான்.
அந்தப் பையன் அழகாய் சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோ ஒன்றையும் காட்டினான். 'என் தங்கை என்னை மறக்காமல் இருக்க மம்மியிடம் இந்த போட்டோவையும் கொடுத்தனுப்பப் போகிறேன். எனக்கு மம்மியை ரொம்ப பிடிக்கும் அவர்கள் என்னை விட்டுவிட்டு போகக்கூடாது என்றுதான் நான் சொல்கிறேன். ஆனால் டாடிதான் என் தங்கையுடன் இருப்பதற்காக அவர்கள் போகப் போவதாக சொல்கிறார்' என்று சொல்லிவிட்டு அந்த பொம்மையை அமைதியாக சோகத்துடன் பார்த்தான்.

நான் உடனே என் பர்சை எடுத்துக் கொண்டு, 'அப்படியானால் நாம் இன்னொரு தடவை உன்னோட பணம் போதுமா என்று எண்ணிப் பார்ப்போமா?' என்றேன். 'ஓகே! இந்த பணம் போதுமேன்றுதான் நினைக்கிறேன்' என்றான். அவனுக்குத் தெரியாமல் என் காசுகளை அதில் கலந்து விட்டு எண்ணினேன். பொம்மைக்குப் போக மீதமும் இருந்தது. அவனிடம் சொன்னேன்.

'என்னிடம் போதுமான அளவுக்கு பணம் இருக்கச் செய்த கடவுளுக்கு நன்றி' என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து 'நான் நேற்று படுக்கப் போவதற்கு முன், என் தங்கைக்கு இந்த பொம்மை வாங்கி அனுப்ப போதுமான பணம் என்னிடம் இருக்கச் செய் என கடவுளிடம் கேட்டு விட்டுத்தான் படுத்தேன். அதுதான் கொடுத்திருக்கிறார்' என்றான்.
'எங்க மம்மிக்கு ஒயிட் ரோஸ் ரொம்ப பிடிக்கும் அதனால் அவர்களுக்கு ஒரு ஒயிட் ரோஸ் வாங்கித் தரனும் என்று அப்போதே நினைத்தேன். ஆனால் கடவுளிடம் ரொம்ப கேட்க வேணாமே என்று விட்டுட்டேன். ஆனால் கடவுள் அதற்கும் சேர்த்தே செய்து விட்டார்' என்றான்.

கடையிலிருந்து வெளியேறும்போது என் நிலைமையே வேறாக இருந்தது. அந்த சிறுபையன் என் மனதிலேயே இருந்தான்.

அதன் பின்தான் இரண்டு நாள் முன்னே நான் உள்ளூர் செய்தியில் படித்தது நினைவுக்கு வந்தது. ஒரு குடிகார டிரைவர் ஓட்டி வந்த ட்ரக், இளம் பெண்ணும் அவளுடைய பெண் குழந்தையும் பயணித்த காரின் மீது மோதிய விபத்தில் பெண் குழந்தை நிகழ்விடத்திலேயே இறந்து விட்டதோடு, அந்த இளம்பெண் கோமாவில் இருக்கிறாள் என்ற செய்தி. ஒருவேளை அந்த சிறுவன் இந்த இளம் பெண்ணின் மகனாய் இருக்குமோ?

சிறுவனை சந்தித்ததன் பின், இரண்டு நாள் கழித்து, அந்த இளம்பெண் இறந்து விட்டாள் என்று செய்தி வெளியாகி இருந்தது. உடனே கொஞ்சம் ஒய்ட் ரோஸ் வாங்கிக் கொண்டு உடல் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு சென்றேன். அங்கு அந்த இளம் பெண்ணின் உடல் சவப்பெட்டியில் வைக்கப் பட்டிருந்தது. அதன் கையில் அழகான வெள்ளை ரோஜா அந்த சிறுவனின் போட்டோவுடன். அதன் மார்புக்கு மேல் அந்த பொம்மை வைக்கப் பட்டிருந்தது. மிகவும் கனத்த மனதுடன் கண்ணீருடன் என் வாழ்வே மாறிப் போன உணர்வுடன் அங்கிருந்து வெளியேறினேன்.

அந்த சிறுவனையும், அவன் தன் தாயின் மீதும் தன் தங்கையின் மீதும் கொண்டிருந்த அன்பும் என்னால் எப்போதும் மறக்க இயலாதது. ஒரு கண நேரத்தில் ஒரு குடிகார காரோட்டியால் அவையாவும் பறிக்கப்பட்டு விட்டது.

தயவுசெய்து குடித்து விட்டு காரோட்டாதீர்கள்.
(இந்நிகழ்வு ஆங்கிலத்தில் எங்கிருந்தோ படித்தது)


சாலை விபத்துகளில் உயிரிழப்பிற்குரிய காரணங்களில் முக்கியமானவை
போதை மருந்துகள்,
மது பானங்கள் மற்றும்
அதீத சோர்வு !!!

Post Comment

Wednesday 13 October 2010

மீந்த செய்திகள் ஐந்து

ஒரு நிலம் வாங்குவது சம்பந்தமாக தங்கமணியிடம் நகைகளில் கால் பகுதி கேட்டேன். நீங்கள் போட்டதுதானே எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.அட! தேவலாமே!

அடுத்த நாள், 'நகை எல்லாம் விலையேறிக் கொண்டே இருக்கிறது. எது வாங்கினாலும் பணம் இருப்பதைக் கொண்டு வாங்குங்கள். நகை விற்பதெல்லாம் வேண்டாம்' என்று சொல்லி விட்டார்கள். ஹூம்! அதானே!

நான்கைந்து நாட்களுக்கு முன் நகை கிராமுக்கு 147திர்ஹம் என்று பார்த்தேன். இப்போது 157 ஆகி விட்டதாம் . நண்பர் சொன்னார்.

அட. இந்த தங்கமணிங்க எல்லாம் கொஞ்சம் புத்திசாலிங்கதான் போல் இருக்கு. :) நகை விடயத்தில் மட்டுமாவது.. :))

7. அயோத்யா பாப்ரி மஸ்ஜித் நில விவகாரத்தில் அலாபாத் உயர் அநீதி மன்ற தீர்ப்பு மனதில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.

இந்த அநீதி தீர்ப்பினால் என்னில் ஏற்பட்ட அதே வலி, நாடு முழுவதிலுமுள்ள எத்தனையோ இந்துக்களுக்கும், கிறித்துவர்களுக்கும், மதமற்ற எத்தனையோ நடுநிலையாளர்களுக்கும் ஏற்பட்டதை கண்ட போதும், கேட்ட போதும், அதை அவர்கள் அதிர்ச்சியெனவும் ஏமாற்றமெனவும் வெளிப்படுத்திய போதும் சிறிது ஆசுவாசம் வந்தது உண்மை. ஆனாலும் உரிய நீதி கிடைக்குமா என்ற அவநம்பிக்கை மனதில் வளர்கிறது.

8. தொலைக்காட்சிப் பெட்டிகள் மிகுந்த பிரபலமாவதற்கு முன், நான் சிறுவனாய் இருந்த போது, திருச்சியில் ஒரு (Radio Repair) கடையில்
'இங்கு வானொலிப் பெட்டிகள் பழுது நீக்கித் தரப் ப(h)டும்'
என்று எழுதி வைத்திருந்ததை மிகவும் இரசித்திருந்தேன். (பிறை அடைப்புக்குள் துணையெழுத்தை மட்டும் எப்படிக் கொண்டு வருவது?)

அதே போல், இப்போது, துபையில ஒரு (Watch Repair) கடையில்
'இது பொழுது பார்க்கும் கருவிகளின் பழுது நீக்கும் இடம்'
என்று எழுதி இருந்தார்கள். மிக அருமை. இனிமைத் தமிழ் மொழி எனது.

9. எங்கள் ஊரில் ஒருவர் விறகு பிளந்தும் மூட்டை சுமந்தும் கடின உழைப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். வயது 85க்கும் மேல் ஆனாலும் திடகாத்திரமான உடம்பு. வலுவேறிய கைகள்.

உங்கள் உடல் வளத்தின் ரகசியம் என்னங்க என்று கேட்டேன். அவர் தம் வாழ்வின் கதையை சொன்னார்.

நாங்கல்லாம் உங்கள மாதிரில்லாம் கிடையாது. அதிலும் இப்ப இருக்கிற புள்ளைங்க இருக்கே! 'தோலிருக்க சுளை முழுங்கிங்களா' வருது.

எனக்கு கல்யாணமாகி ஆறேழு வருசமாச்சு. என் மாமியார், எம்பொஞ்சாதிய கூப்பிட்டு, 'ஏம்புள்ள! கல்யாணமாகி இம்புட்டு நாளாச்சு. ஒரு புழு பூச்சியும் காணோம். ஒன்னை மருமகன் நல்லா வச்சிருக்கானாடி'ன்னு கேட்டாங்களாம். 'அதெல்லாம் நல்லாத்தான் வச்சுருக்காரு'ன்னாங்களாம்.

சரியான பொச கெட்டவளா இருக்காளேன்னு அவுங்க நன்னிம்மாவ (தாய் வழி பாட்டி) கூப்பிட்டு கேக்க சொன்னாங்களாம்.
'ஏண்டி ராத்திரில என்னடி செய்வே'ன்னு கேட்டாங்களாம்.
'ம்ம். அவுருக்கு சோறு வச்சு தருவேன். சாப்டுவோம். சாப்ட்டவுன்னே வெத்தில பாக்கு மடிச்சு தருவேன். அப்புறம் படுத்துக்குவோம்'
'ம் அப்புறம்'
'ம். அப்றம் என்னா? தூங்குவோம்'
'ம். அப்றம் என்னாடி'
'அப்றம் என்னா? பஜ்ருக்கு (விடியல் தொழுகைக்காக பள்ளிக்கு) போவார். நான் வூட்ல தொழுதிட்டு தண்ணி எடுக்க ஆத்துக்கு போவேன்'
'பஜ்ருக்கு முன்ன என்னாடீ?'
'அதான் தூங்குவேன்னு சொன்னன்ல'

ஒன்னும் விபரமில்லன்னு தெரிஞ்சவுடன்
ஹாஜியார் வீட்டுக்காரம்மா, கருப்பா குள்ளமா இருப்பாங்க, அவுங்கள்ட்ட விவரம் சொல்லித் தர அனுப்புனாங்க

அவுங்க வீட்டுக்கு போய் வந்தவொன்ன, அவுங்கம்மாட்ட "அவள்லாம் பொம்பளையா. அம்மா வயசில இருக்கா. எப்படி தப்பு தப்பா பேசுறா தெரியுமா? என்ன எதுக்கு அவுங்கள்ட்ட அனுப்பினன்னு" ரொம்ப தகராறு பண்ணிட்டு வூட்டுக்கு வந்திட்டா. அதுக்கப்புறம் அவுங்கம்மா வூட்டுக்கும் போறத உட்டுட்டா.

அதுக்கப்புறம் ஒரு அஞ்சாறு மாசம் கழிச்சு, நமக்கும் விபரமில்லன்னு தெரிஞ்சுகிட்டு பாடம் சொல்லித் தர ஹாஜியார்ட்ட (ஊரில் அப்ப அவர் பெரிய மனுஷர்) அனுப்னாங்க.
ஹாஜியார் கச்சா முச்சான்னு சொல்லித் தந்ததுல, அவர் மூஞ்சி மின்னாலயே திட்டி வுட்டுட்டு வந்தேன்.

அப்றம் திரிச்சாப்ல இரண்டு மூணு தரம் கூப்பிட்டு வச்சு அவுரு சொன்ன பின்னதானே விவரம் தெரிஞ்சுச்சு.

என் வூட்டுக்காரி குளிர் ஜூரம் வந்து பத்த நாள் கடந்தா.
கல்யாணமாயி எட்டு வருஷம் கழிச்சுதான் மொத மொதல்ல இரட்ட குழந்த புறந்துச்சு.

அப்டிலாம் வெள்ள வாயா இருந்ததுனாலதான் உடம்புல வலுவிருக்கு. உங்கள மாதிரியா என்றார்.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை பற்றி ஒவ்வொரு பார்வை. இது கிராமத்து மனிதர்களின் பார்வை.

10. கடைசியாக, விடுமுறையில் படித்த ஒரு மீன் பிடிப்பவரின் கதை

ஒரு மீன் பிடிப்பவர் விடியற்காலையிலேயே எழுந்து கடலுக்கு வந்திருக்கிறார். சரியாக வெளிச்சம் வராமல் இருட்டாகவே இருந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் விடிந்தவுடன் கட்டு மரத்தை சரி பண்ணி கடலுக்குள் போகலாமென்று கரையிலேயே அமர்ந்து விட்டார். அருகில் சிறு குவியலாக குவித்து வைக்கப்பட்டிருந்த பொடிக் கற்களை ஏதோ யோசித்தவராக ஒவ்வொன்றாக கடலில் வீசிக் கொண்டிருந்தார். கையில் ஒரு கல் மீதமிருந்த போது நன்றாய் விடிந்து விட்டிருந்தது. கையில் இருந்தது வைரக்கல்.

சே. அவ்வளவு வைரக்கற்களையும் தெரியாமல் கடலில் வீசி விட்டோமே என்று நொந்து தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்.

இதிலிருந்து நாம் பெரும் நீதியென்ன?

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

பையன் சொல்றான்
இனி இயன்றவரை இருட்டிலேயே விழித்து விடக்கூடாது என்பதுதானோ! :))))))))

ஹேய்!. ஒழுங்கா பஜ்ருக்கு போவுல உதை படுவே!.

Post Comment