Wednesday 31 December 2008

கொடுங்கோலர்களின் தகவலுக்கு மறுப்பு

காஸாவில் தற்போது யூதர்களால் நடத்தப்படும் இனப்படுகொலையை "ஹமாஸ்க்கு எதிரான போர்" என வர்ணிப்பதோடு, இந்தப் படுகொலைகள் 'பாலஸ்தீனர்களால் இஸரேலில் ஏவப்பட்ட ராக்கெட்களுக்கான பதிலடி' என்றும் யூதர்களும் அவர்களின் கைக்கூலிகளும் சொல்லி வருகின்றனர்.

இது மிகப்பெரிய பொய்.

காஸாவில் பாலஸ்தீனர்களின் வாழ்வாதாரமாய் உள்ள போக்குவரத்து பாதையில் இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள தடைகளை நீக்கிவிட்டால் 'நாங்கள் துப்பாக்கி, எறிகணைத் தாக்குதல்களை முற்றாக நிறுத்தி விடுவோம்' என ஹமாஸ் பலமுறை திரும்ப திரும்ப அறிவித்தும், இஸ்ரேல் தடைகளை அகற்ற மறுக்கிறது. உயிர் வாழ தடை ஏற்படுத்தப் பட்டு, மனைவி, மக்கள், நண்பர்கள் உணவுக்காக தவிக்கும்போது வழியற்றவன் என்ன செய்ய முடியும்?

இஸ்ரேல் காஸாவில் தனது ஆக்கிரமிப்பை முடித்துக் கொண்டு விட்டதாக வெறுப்பூட்டும் வாய் விளம்பரங்களை திரும்பத் திரும்ப உலகத்தாரிடம் சொல்கிறது. அது உண்மைதான் எனில், காஸாவின் வான் வெளியும், காஸாவின் நீர் பரப்பும், கடற்கரைகளும், காஸாவின் எல்லைகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது ஏன்? காஸாவின் வாழ்க்கை முறை முழுமையும் இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்ன நியாயம்?

சோற்றுக்கு வழி தேடி ஒவ்வொரு வேளையும் திண்டாடித் திரியும் மக்களைக் கொண்ட காஸாவின் உட்புறங்களில் தயாரிக்கப்படும் இவ்வகை எறிகணைகள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த இயலாத வெறும் சப்தம் எழுப்பும் புஸ்வானங்கள்தான் என்பதை உலகமே அறிந்துதான் இருக்கிறது. இந்நிலையில் காஸாவில் வாழும் பாலஸ்தீனர்களுக்கு, இஸ்ரேல் இரு வழிகளைத்தான் திறந்துள்ளது. ஒன்று உணவுக்கு வழியின்றி அழிதல் மற்றொன்று இஸ்ரேலிய போர் ஆயுதங்களால் அழிதல். இந்த எறிகணைகள், இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ள போக்குவரத்து தடைகளை நீக்க உலகத்தை நோக்கி எழுப்பப்படும் நீதியை வேண்டிய ஒலி மட்டுமே.

ஆறு மாத காலமாக இஸ்ரேலுக்கும் ஹமாஸூக்கும் இடையிலிருந்த போர் நிறுத்த ஒப்பந்த காலத்தில் இஸ்ரேல் 49 பாலஸ்தீனியர்களை கொன்றொழித்தது. ஹமாஸினால் இஸ்ரேலில் எவருமே கொல்லப்படவில்லை. இதற்கு இஸ்ரேல் எங்ஙனம் பதில் சொல்லும்? யார் பழி தீர்க்கப்பட வேண்டியவர்கள்?.

(டிசம்பர் 29ம் நாள் பெல்ஹோஸா என்ற ஐந்து பேர் கொண்ட பாலஸ்தீனக் குடும்பத்தின் மூன்று குழந்தைகள் யூதக் கொடுங்கோலர்களின் குண்டுகளுக்குப்
பலியாகி, புதைக்கத் தயாராக வடக்கு காஸாவில் அமைந்துள்ள கமால் எட்வன் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள காட்சி)


இது ஹமாஸிற்கு எதிரான போர் என்பது பெரும் பொய்யே தவிர வேறில்லை. இது நாஜிகளைப் போல, ஓர் இனத்தை பூண்டோடு நிர்மூலமாக்கும் எண்ணத்தோடு திட்டமிட்டு நடத்தப்படும் இனப்படுகொலைப் போர். நாஜிகளால் கடுமையாகத் துன்புறுத்தப்பட்ட யூத குலம், தாமே நாஜிகளாக மாறிப்போனதுதான் அவலம்.

ஹிட்லரின் எண்ணம் கொண்ட, டெல்அவிவ் நரகத்து போர்க் கிரிமினல்கள் சொல்வது போல் இது ஹமாஸிற்கு எதிரான போராக மட்டும் இருந்தால் கடைத் தெருக்களும், மருந்துக் கூடங்களும், கல்லூரிக் கட்டிடங்களும், தனியார் குடியிருப்புகளும், பள்ளிவாயில்களும், கலாச்சார மையங்களும், சாலைகள், வியாபாரத் தளங்கள் போன்றவைகளும் குறி வைத்துத் தகர்க்கப்படுவதின் காரணமென்ன?

இன்று ஒரு நேர்மையான யூத ரப்பி கூட "இஸ்ரேல் காஸாவில் நடத்தும் தற்போதைய போர் ஒரு இன அழிப்புக் கொடூரம்" என்றே சொல்கிறார்.

Post Comment

Monday 22 December 2008

காவிகள் பகையுணர்வின் வரலாறு

ஹிந்து மகாசபை மற்றும் ஆர்எஸ்எஸ்காரர்கள் இந்நாடு முழுதும் பற்பல இடங்களில் 'சரஸ்வதி சிசு மந்திர்' என்று பெயரிலும் 'வித்ய பாரதி பள்ளி' என்ற பெயரிலும் பள்ளிகள் நடத்தி வருகிறார்கள் என்பதை முதலில் நான் அறிந்திருக்கவில்லை. இப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரிய ஆசிரியைகள் பணிபுரிவதுடன் இலட்சக்கணக்கில் மாணவர்களும் பயின்று வருகின்றனர். அவர்கள் தங்கள் பாடபுத்தகங்களை அச்சிட்டுக் கொள்ள சொந்தமாக வெளியீட்டு நிறுவனமும் வைத்துள்ளனர்.

நமது நாட்டில் எவ்வளவு அதிகம் முடியுமோ அத்துனை பள்ளிகளும் பாடப் புத்தகங்களும் தேவையென்பதால் இப்பள்ளிகளைப் பற்றி அறிந்த போது நான் மகிழ்ந்தேன். ஆனால் அவர்கள் இந்தப் பள்ளிகளில் என்ன நடத்துகிறார்கள் என அறிந்த போது கடுமையான ஏமாற்றமடைந்தேன். நம்ப வைக்கப்படுகின்ற வெறும் வரலாற்றுக் கட்டுக்கதைகள். அந்தக் கட்டுக் கதைகளின் மூலம் நம் பழங்காலத்தைப் பற்றி அதிக மன உறுதியும், அதே சமயம் நம் நாட்டில் நம்மைப்போல் வரலாறு இல்லாத, ஆனால் இந்தியராகப் பிறந்த, முஸ்லீம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் எதிரான அவநம்பிக்கையையும் பகையுணர்வையும் வளர்த்தெடுப்பதையுமே செய்கின்றார்கள்.

முதன் முதலாக, அவர்கள் கல்வித் திட்டத்தில், பாரத வரலாறு ஆரிய வருகையுடன்தான் தொடங்கியதாக நம்ப வைக்கப்படுகிறது. நமது நாட்டின் தென்பகுதியில் ஆரியர்கள் முதன் முதலாக குடியேறும் முன்னரே இந்நாட்டின் பூர்விகக் குடிகளான திராவிடர்கள் வாழ்ந்திருந்த வரலாறு மறைக்கப்டுகிறது.

யூத, ஜிப்சி இனத்தவரை கொட்டில்களில் அடைத்து, நச்சுக் காற்றை செலுத்திக் கொன்று, செமிட்டிக் இனத்தவரின் ஆரிய ஜெர்மனியை உருவாக்கிய அடால்ப் ஹிட்லர்தான் அவர்களது முன்மாதிரி. ஆனால் தற்போதைய ஜெர்மானியர்களே ஹிட்லரை பேய் அவதாரம் (Devil-incarnate) என எண்ணுவதோடு அவனை நினைந்து வெட்கித் தலை குனிகின்றார்கள். ஆர் எஸ் எஸ், சிவசேனைத் தலைவர்களுக்கோ அவன் புகழுக்குரிய உதாரண புருஷன். இணையத்தில் உலவும் சிலவற்றுக்கு யூதர்களும் முன்மாதிரிகள் அவர்களைக் கொன்ற ஹிட்லரும் முன்மாதிரி. என்ன கொடுமை!.

அவர்களது பாடத் திட்டத்தின்படி பவுத்தமும் அதை விரிவு படுத்தி அஹிம்சையை போதித்த பேரரசர் அசோகனும் கொடூரமான நாசக்காரர்களாம். இவர்களால்தான் நம் இயல்பான போர்க்குணம் களவு போய் நாம் கோழைகளானோமாம். இதனால்தான் ஒரு கையில் வாளையும் மறு கையில் குர்ஆனையும் கொண்டு வந்த முஸ்லீம் படைகளை நாம் எதிர்க்க முடியாமல் போனோமாம் (மனநோய் பீடித்ததைப்போல் உளரும் கயவர்கள்). ஆர் எஸ் எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவர் கூற்றின்படி அசோகனும் பவுத்தமும் சீறி வரும் நச்சுப் பாம்புகளாம்.

அவர்களது பாடப்புத்தகத்திலிருந்து சில உதாரணங்கள்:
1.முஸ்லீம்கள் மெக்காவில் அமைக்கப் பட்டிருக்கிற கருப்புக் கல்லாகிய சிவலிங்கத்தைத் தரிசனம் செய்ய பெரும் விருப்பம் கொண்டவர்கள். அட பைத்தியங்களே!.
2.டெல்லியில் கட்டப்பட்டுள்ள குதுப்மினார், பேரரசர் சமுத்திர குப்தரால் கட்டப்பட்ட விஷ்ணு ஸ்தம்பா ஆகும். - அதன்மேல் குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்டு அழகு படுத்தப் பட்டுள்ளதைப் பற்றி ஏதும் சொல்ல மாட்டார்கள்.
3.பாபரி மஸ்ஜித் எப்போதும் ஒரு பள்ளிவாயிலாகவே இருந்ததில்லை ஏனெனில் அங்கு எப்போதுமே தொழுகை நடைபெற்றதில்லை என்று வலியுறுத்துவார்கள். - இடிப்பதற்கு முன்னுள்ள அதன் நிழற்படத்தைப் பார்த்தாலே அதன் மூன்று கும்பாவும் மெக்கா நோக்கியுள்ள அதன் சுவர்களும் அது பள்ளிவாயில்தான் எனத் தெளிவு படுத்தும்.

இணையத்தில் பிதற்றித் திரியும் இத்தயைவர்களைக் கண்டு இனி அனுதாபம் கொள்ள முயற்சியுங்கள். அவர்கள் எங்கு கல்வி பயின்றனர் என்று அறிந்து கொள்ளுங்கள். சிறு வயதிலிருந்தே இவ்வாறு மூளைச்சலவை செய்யப் பட்டவர்களால் என்ன செய்ய இயலும். பாவம்.

ஆர் எஸ் எஸ் தலைவர் சுதர்ஸனன் நவம்பர் 2001ல் வெளியிட்ட கருத்தில் சிறந்த வரலாற்றாய்வாளர்கள் எல்லாம் இந்துக்களுக்கு எதிரான ஐரோப்பிய இந்தியர்கள் என்றார். பழங்காலத்து இந்தியாவில் அணு சக்தியைப் பற்றிய அறிவிருந்தது என்பதாகவும் பரத்வாஜ முனிவரும் இராஜ போஜ் முனிவரும் ஆகாய விமானம் செய்வதைப் பற்றி விளக்கி இருப்பதோடு எத்தகைய விமானங்கள் எவ்வளவு உயரத்தில் பறக்கும் என்பது பற்றியெல்லாம் விளக்கி இருக்கின்றார்களாம். இவ்வாறு புனையப்பட்ட கட்டுக்கதைகள் யாவும் வாஜ்பாயியின் பாஜக ஆட்சியின் போது கல்வித்துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷியின் உத்தரவின்படி வரலாறாக பதிவிக்கப்பட்டது. இந்த ஜோஷிதான் பல்கலை கழகங்களில் ஜோஸியத்தை தனிப்பாடப் பிரிவாக புகுத்தியவர். ஆனால் இவர் ஜாதகப்படி வெற்றிதான் என வலியுறுத்தப்பட்ட தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.

இந்தப் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் பாடங்களின்படி இந்திய விடுதலைப் போரில் மகாத்மா காந்தியின் பங்கு குறைவாக்கப்பட்டு வீர்சாவர்க்கரின் பங்கு உயர்த்திக் காட்டப்படுகிறது. மகாத்மா காந்தி கொலை வழக்கில் technical அடிப்படைகளில் இவர் விடுவிக்கப்பட்டிருந்தாலும் பின்னால் நீதிபதி கபூர் கமிஷனால் இவர்தான் கொலைக்கு முக்கிய தூண்டுகோலாக இருந்தவர் எனக் தெளிவுபடுத்தப் பட்டிருந்தார். பாஜக ஆட்சியின்போது இவர் சிலைதான் நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டது.

நான் ஒரு பக்கச் சார்பாக பேசுவதாக உஙகளுக்குத தோன்றினால் JNU பல்ககைழகத்தின் முக்கிய மூன்று வரலாற்று பேராசிரியர்கள் ஆதித்யா முகர்ஜி, ம்ருதுலா முகர்ஜி, சுச்சிதா மஹாஜன் (Aditya Mukherjee, Mridula Mukherjee and Sucheta Mahajan) ஆகியவர்கள் தொகுத்த ஆர் எஸ் எஸ் பள்ளி பாடப்புத்தகமும் மகாத்மா காந்தியின் கொலையும் [booklet — RSS School Texts and the Murder of Mahatma Gandhi (Sage)] என்ற வெறும் 80 பக்கங்களுள்ள சிற்றேட்டை பார்வையிடுங்கள். அதில் அவர்கள் எடுத்தாண்ட ஒவ்வொரு மேற்கோளின் நம்பகத்தன்மையையும் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தி உள்ளனர்.

பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் இத்தகையை நஞ்சை விதைத்து, மற்றவர்களுக்கெதிராக பகைவெறியை ஊட்டி வளர்ப்பது நாட்டு நலனுக்கு உகந்ததா?

ஒற்றுமையுள்ள இந்தியா என்ற நம் இன்பக் கனவுகளுக்கு எதிராக வன்முறையையும் உள்நாட்டுப் போரையும் நம் சந்ததிகளின் மூளையில் திணிக்க அனுமதிக்கலாமா? யோசியுங்கள்.

ஏறக்குறைய இந்தியாவில் நடைபெறும் எல்லா தீவிரவாத நடவடிக்கைகளிலும் இத்தகைய மூளைச்சலவை செய்யப்பட்டவர்களின் பங்கு பற்றி சிந்திக்க வேண்டாமா?

இத்தகைய எண்ண ஓட்டம் கொண்டவர்களையும், அதிலேயே தீவிரமானவர்களையும்தான் பாஜக ஆட்சியின் போது எல்லா முக்கிய நிர்வாக பொறுப்புகளிலும பதவிகளிலும் உள் நுழைத்து வைத்தார்கள். இவர்களிடமிருந்து நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியுமா? இதற்கான நல்லதொரு தீர்வைத் தேடி ஆக்கபூர்வமான வழியில் பயணிக்க வேண்டிய நேரமிது. குறைந்தது அவ்வழியில் சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் அல்லது நாட்டிற்கு நல்லதை விழைபவர்களுக்கான அவசியம்.

(அமிர்தசரஸ் KJS அலுவாலியா என்பவரின் ஆக்கத்தைத் தழுவி எழுதியுள்ளேன்

Post Comment

Monday 1 December 2008

49-O தெரியுமா? இந்தியாவில் மறைக்கப் படுகிறதா?

நமது இந்திய அரசியல் நிர்ணயச்சட்டத்தின் 1969ம் ஆண்டு சட்டத்தின் 49-O பிரிவின் படி, ஒருவர் வாக்குச் சாவடிக்கு சென்று, தங்களுடைய அடையாளத்தை உறுதிப் படுத்திய பின்னர், “தான் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை” என்பதை அங்குள்ள அதிகாரியிடம் தெரிவித்து விட்டு, விரல் அடையாள மை பெற்றுக் கொண்டு வரலாம்.

ஆம். இந்த விடயத்தைப் பற்றி கூடுதல் அறிந்தவர்கள் மக்களுக்கு எடுத்துச் செ/சொல்லுங்கள். இந்த வாய்ப்பை பற்றி அரசியல் வியாதிகள் மூடி மறைப்பதாகவே தெரிகிறது.

'யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை' என்று தெரிவிப்பதால் என்ன பயன்?
ஒரு தொகுதியில் ஒருவர் 500வாக்குகளில் வெற்றி பெறுகிறார் எனக் கொள்வோம். அதே தொகுதியில் இந்த 49-O வாக்குகள் 500 விழுந்திருந்தால் அத்தொகுதியின் தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டு மறுதேர்தல் நடத்தப் பட வேண்டுமாம். அது மட்டுமில்லாமல் அப்போது தேர்தலில் நின்றவர்களின் மறுபடியும் அதே தேர்தலில் நிற்க முடியாது. ஏனெனில் மக்கள் அவர்களுக்கு எதிராக தங்கள் விருப்பமின்மையை அறிவித்து விட்டனர்.

இதன் மூலம் கட்சிகளுக்கு பயம் வரும். அதனால் கட்சிகள் பொறுப்பான நல்லவர்களை தேர்நதெடுக்கும். இதன் மூலம் நாம் சாக்கடை அரசியலை மாற்றி நல்ல அரசியலை நாட்டுக்குத் தர முடியும். இது போன்ற ஒரு நல்ல வாய்ப்பு நம் அரசியலமைப்பு சட்டத்தில் இருப்பதை தேர்தல் கமிஷன் கூட மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்லையே.

இதன் மூலம் அழுகிய அரசியல் கட்சிகளை அப்புறப் படுத்த முடியும். ஓட்டளிக்காமல் இருப்பதுவும் ஓட்டளிப்பதை விட நல்ல நன்மையை நாட்டுக்குச் செய்திடும். எனவே உங்கள வாய்ப்பை நழுவ விடாதீர்கள். 49-Oவைப் பயன்படுத்துங்கள்.

49-Oவைப் பற்றி கூடுதல் அறிந்தவர்கள் சொல்லுங்கள். இதன் சாதக பாதகங்களையும் மேலும் அலசுங்கள்.

நமது ஓட்டளிக்கும் உரிமையின் மூலம் சிறந்த இந்தியாவை உருவாக்குவோம்.

Post Comment