Thursday 14 May 2009

ஐயாவுக்கு 'சாவின் சிறப்பும்' ஒரு 'அருக்காணியும்'..... பார்...சல்

பத்தாவது தேர்வு எழுதி விட்டு வீட்டில் இருக்கும் நேரம்.

தம்பீ அந்த ஊர் கல்யாணத்துக்கு போக வேணும். எனக்கு போக வசதிப்படாது. கோவிச்சுப்பாங்க. பக்கத்து வீட்டு அக்கா தெருக்கோடி மாமா எல்லாம் போறாங்க. நீயும் அவுங்க கூட போய் விட்டு கல்யாணத்துல கலந்து விட்டு நூற்றி ஒரு ரூபா மொய் வைத்து விட்டு வருகிறாயா?

எனக்கிதெல்லாம் தெரியாதேம்மா?

என்ன பெரிய விடயம். வர வர பெரிய பிள்ளைதானே. பார் பெரிய மாமா வீட்டில சின்ன மச்சான்தான் போரான். போய்ட்டு வாடா ராசா. காரிலதானே போகப்போறே.

சரிம்மா.

புதுச் சட்டை, புதுக் கைலி, கையில ரொக்கம். பெரிய மனுசன் கௌம்பியாச்சுல்ல. அங்க வஸ்திரம் மட்டும்தான் குறைவு.

ஊரில் போய் இறங்க இரவு 7மணி.
''மச்சான் விடியல் காலையில 5மணிக்கு மேலதான் கல்யாணம். பக்கத்தூரில போய் இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்திட்டு வருவோம்'' - இது மாமா மகன்
''இல்ல மச்சான் தெரியாத ஊர்ல வம்பு என்னாத்துக்கு''
''சே. நாங்க சின்னப்பசங்களே பயப்படலே. நீ என்ன பயப்படறே. சைக்கிள் எடுத்து ஒரு மிதி. 2 மணிக்கு வந்திட்டா அப்புறம் என்னா?'' - இது கூட வந்திருக்கிற வானரப் பட்டாளம்
மச்சான் போய், இரவு வாடகைக்கு சொல்லி, எடுத்த ஐந்து மிதிவண்டிகளில் பயணம்
நாங்கள் போன நேரம் அந்த ஊரில் அன்று திருவிழா நாள்.
''வேணாம் மச்சான் ஒரே கூட்டமா இருக்கு. லெப்ட்ல ஒடிச்சி போயிரலாம்'' - இது நான்
''கூட்டமா இருந்தா என்னா? சும்மா வா மச்சான்'' - இது மாமா மகன்

போலீஸ் மாமா பிடித்து விட்டார். "யார்ரா நீங்க? ராத்திரில லைட் இல்லாம சைக்கிள்ல சுத்தறது?"
"பக்கத்து ஊரு கல்யாணத்துக்கு வந்தோம். சினிமா பார்க்க வந்தோம்'' - நான்
''சாயபு பசங்களா?'' சைக்கிளோடு எங்களையும் தள்ளிக் கொண்டு போய் காவல் நிலையத்தில்
''இல்ல சார் இனிமே வர மாட்டோம் வாடக வண்டி சார்''- நான்
''யோவ் ஏட்டு. பசங்கள ஒரு பதினைந்து நாள் உள்ள வச்சாதான் சரிப்படுவானுங்க. நீ பாத்துக்க''. கிளம்பிட்டார்

திடீரென்று காவல் நிலையத்தில் பயங்கர சத்தம். திரும்பிப் பார்த்தா நம்ப பசங்க நாலு பேரும் 'ஓ'வென்ற இரைச்சலோடு பேரழுகை. நமக்கும் தொண்டை வரை..... வெளி வராத அழுகை.

அதில ஒருத்தன் கைலி ஈரமாகி அடியில திட்டாக. கைலியிலிருந்து சொட்டு சொட்டா.....
அங்கு வந்த ஏட்டு, 'ஐயைய்ய' அவனுக்கு மட்டும் ஒரு அடி. சத்தம் பெரிதாக ஒங்கி குரலெடுக்க ஏட்டின் அதட்டல்
''சார். விட்ருங்க சார். இனிமே வர மாட்டோம் சார்'' - நான்
''எஸ்ஐ புடிச்சிருக்கார் நான் உட கூடாதய்யா'' - ஏட்டு

"சரி இங்க வா. எவ்வளவு வச்சிருக்கீங்க''
ஆளுக்கு நூற்றிஒன்று. மொய், ஏட்டுக்கு.

"பசங்களா! பாருங்க!. நேரா கொட்டகைல போய் எம்பேர சொல்லுங்க. காசு வாங்காம உள்ள விட்ருவாங்க. சரியா"
"சார் மணி பன்னென்டு ஆவப் போகுது. படம் ஆரம்பிச்சிருப்பாங்க. நாங்க திரும்ப போயிடறோம் சார்" - நான் "டேய் ஒழுங்கா கொட்டகைக்கு போய் பாத்துட்டுதான் போகனும். போங்கடா"

அப்புறம் கொட்டகைக்கு போய் ஏட்டு பேரச் சொல்லி பாதிக்கு மேல படம் பார்த்து.....
'மச்சான்! யாருக்கும் தெரியாம நடந்த விஸயம் நமக்குள்ள இருக்கட்டும்' - இது மாமா மகன்
டேய் வாயை மூடு. இனி வாயைத் தொறந்தே....... - இது நான்

கல்யாணம் முடிந்து கிளம்பலாம்னு பார்த்தால்.......
கூட வந்த பக்கத்து வீட்டு அக்கா - தம்பீ. புள்ளைக்கு உடம்பு சரியில்ல. கடையில போய் 'ஒரு சாவின் சிறப்பு' வாங்கிட்டு வாப்பா?
புள்ளைக்கு உடம்பு சரியில்ல! சாவின் சிறப்பா? என்னக்கா சொல்றே
நீ கடையில போய் அப்படியே கேள்றா தம்பீ.
போக்கா நான்லாம் இந்தாட்டத்துக்கு வர்ல
வந்த இடத்தில யார்றா இருக்கா? போய்ட்டு வாடா.
கடையில போய், தயங்கித் தயங்கி, 'ஒரு சா....வின்.....
ஹேய்... இங்க ஒரு சாவின் சிறப்பு கொடுப்பா?
கொடுத்தார். அது Salvin Syrub

கார் ஊருக்கு திரும்புகிறது
வழியில் கோடி வீட்டு மாமா மாத்திரை எடுத்து வர மறந்துட்டாராம்.
மாத்திரை வாங்கிட்டு வா தம்பீ
ஏங்க நாந்தான் கெடைச்சனா? இத்தனை பசங்க இருக்காங்கள்லே. மாத்திரை பேர் என்னான்னு சொல்லனும். இல்லன்னா மாத்திரை அட்டைய காமிக்கணும். என்னா மாத்திரைங்க? - நான்
வண்டி சக்கரம் ஹீரொயினி பேர் என்னா? - இது மாமா
மாமு இதெல்லாம் ரொம்ப ஓவர் - இது என் மச்சான்
இல்ல தம்பி. மாத்திரை அந்த பேர் மாதிரிதான் வரும் - மாமா
அது சரிதா - பக்கத்து வீட்டு அக்கா
அதில்லம்மா. படத்துல அவ பேர் என்னா? - - மாமா
மாமு நீ போற வரைக்கும் தாங்குவயா - இது என் மச்சான்
டேய் நீ சும்மா இரப்பா - டிரைவர் வண்டியை நிறுத்திட்டு கடை கடையா பொய் சரிதாவுடைய பேர் விசாரிக்க போய் விட்டார்
15 நிமிடத்துல திரும்ப வந்து - கடைசி கடை வரைக்கும் கேட்டாச்சு, யாருக்கும் தெரியலெங்க
மாமு ம்ஹிம் நீ பூட்ட கேசு - மச்சான்
இறங்கி ஓடி ஐந்து நிமிடத்தில திரும்ப வந்த மச்சான் 'கண்டு பிடிச்சுட்டேன்' 'அருக்காணி'
அட ஆமாந்தம்பீ. அந்த மாத்திரைதான் - மாமு
ஏங்க என்ன வெளையாடறீங்களா. அருக்காணி மாத்திரையா? -நான்
என்ன செய்ய…..
திரும்ப தயங்கித் தயங்கி - 'அருக்...காணி... மாத்....திரை...'
எதுக்கு சாப்பிடறது - கடைக்காரர்
BP, கொலஸ்ட்ரால்
அதா..... ஏதோ Hல் ஆரம்பிக்கும் பேருள்ள மாத்திரை கொடுத்தார். எனக்கும் இப்ப மறந்து விட்டது.

Post Comment