Showing posts with label செய்திவிமர்சனம். Show all posts
Showing posts with label செய்திவிமர்சனம். Show all posts

Sunday, 28 January 2007

சும்மா கோர்ட்டுக்கு

ஐக்கிய அரபு அமீரகத்தில் அல்-அய்ன் என்றொரு இடமுண்டு.

இங்கே ஒரு பெண் கோர்ட்டுக்கு போனார். “என் கணவர் என்னை வெளியே செல்ல விட மறுக்கிறார். அவர் எனக்காக கொடுத்துள்ள வீடு நாற்றமடிக்கிறது. அதனால் நீங்கள் தலையிட்டு அவருக்கு அறிவுரை சொல்லவும்.” என்று விண்ணப்பித்தார்.
“வீடு நாற்றமடிப்பதால் நீங்கள் விரும்பிய இடத்தில் தங்கலாம்” என்று கோர்ட் தீர்ப்பு சொன்னது.

கணவர் மேல் கோர்ட்டில் “என் மனைவி வெளியே செல்லும் முன்னர் என்னிடம் கேட்பதில்லை அதனால் நீங்கள் தலையிட்டு அவருக்கு அறிவுரை சொல்லவும்” என்று மேல் முறையீடு செய்தார்.

“வீடு நாற்றமடிப்பதால் அது அப்பெண்ணுடைய உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் கேடானது. எனவே அவர் விரும்பிய இடத்தில் இருந்து கொள்ளலாம்” என்று மேல் நீதி மன்றமும் தீர்ப்பளித்துள்ளது..

நாற்றமடிக்கும் வீட்டை சுத்தப்படுத்தினால் பிரச்னை முடிந்தது. அதைப்பற்றி தீர்ப்பில் எதுவும் காணோம்.

இனி “என் மனைவி உணவில் சரியான அளவில் உப்பு சேர்க்கவில்லை” என்று கணவணும்
“என் கணவர் சரியாக விரும்பி உண்பதில்லை” என்று மனைவியும்
எது எதற்குத்தான் நீதி மன்றம் போவதென்பதில்லையா?

(பி.கு.: புது பிளாக்கருக்கு மாறிய பின் என்னென்னவோ நடக்குது.
புரோபைலில் போட்டோ காணவில்லை.
அதனால் தமிழ்மணத்தில பதிய முடிகிறதா என்று அறியத்தான் -
இது இன்றைய கலீஜ் டைம்ஸ் செய்தி)

Post Comment