Tuesday 19 March 2013

மெயிலில் வந்த சர்தார்ஜி கதை.


லண்டனிலிருந்து இரண்டு பாகிஸ்தானிகள் விமானத்தில் பயணம் செய்ய வந்தனர். ஒருவர் ஜன்னலோர இருக்கையிலும் மற்றவர் அதற்கடுத்த நடு இருக்கையிலும் அமர்ந்து கொண்டனர். விமானம் புறப்படும் நேரத்தில் ஒரு சர்தார்ஜி பாதையோர இருக்கையில் (ஐஸ்ல்) வந்தமர்ந்தார்.

விமானம் டேக்ஆப் ஆகி பறக்கத் துவங்கியவுடன் சர்தார்ஜி தன் ஸூவை கழற்றி விட்டு விட்டு காலாட்டிக் கொண்டு வசதியாக இருக்கையில் சாய்ந்தார். ஜன்னலோர பாகிஸ்தானி, 'நான் எழுந்து போய் ஒரு கோக் வாங்கி வர வேணடும்' என்றார்.

சர்தார்ஜி, 'நீங்கள் எழ வேண்டாம். நான் போய் வாங்கி வருகிறேன்' என்று எழுந்து போனார். அவர் எழுந்து போன உடனே அந்த பாகி சர்தார்ஜியின் ஒரு ஸூவை எடுத்து அதில் எச்சிலை நன்றாக துப்பி வைத்து விட்டார்.

சர்தார்ஜி கோக்கை கொடுத்து விட்டு இருக்கையில் அமர்ந்ததும் அடுத்த பாகி, 'எனக்கும் ஒரு கோக் தேவைப்படுகிறதே' என்றார். சர்தார்ஜி அவருக்காக கோக் வாங்கி வர எழுந்து போனார். அவர் எழுந்து போனதும் இந்த பாகி யும் சர்தார்ஜியின் இன்னொரு ஸூவை எடுத்து அதில் எச்சிலை நன்றாக துப்பி வைத்தது.

பயணம் முடிந்து, விமானம் தரையிறங்கியதும், சர்தார்ஜி தன் ஸூவுக்குள் காலை நுழைக்கவும் என்ன நடந்திருக்கிறது என புரிந்து விட்டது. சர்தார்ஜி இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து, தன் சக பயணிகளான பாகி களிடம்,

இது ஏன் நமக்குள் இன்னமும் இப்படியே இருக்கிறதென தெரியவில்லை!

இன்னும் எவ்வளவு நாளுக்குத்தான் இது இப்படியே தொடருவது?

நமது நாட்டிற்கிடையில் பகைமையும் போரும்.......?

இந்த மாதிரி வெறுப்பும்...?

இத்தகைய குரோதமும்...?

ஸூவுக்குள் எச்சில் துப்பி வைப்பதும்,,,,?

கோக்குக்குள் மூத்திரம் பெய்து கொடுப்பதும்...? 

Post Comment