Thursday 26 March 2009

துபாயில் ஆலங்கட்டி மழை அனுபவம்

நான் துபை வருவதற்கு முன் ஒரு முறை துபையில் கடுமையான ஆலங்கட்டி மழை பெய்ததாக என் தம்பி சொல்வார். அவர் அப்போது ஒரு அரபி வீட்டில் வேலைக்கு இருந்தார். வீடுகளெல்லாம் இப்போது போல் இல்லை. மழையில் வீடெல்லாம் ஈரம். "இங்கெல்லாம் மழையே வராது. இந்தியர்களும் பாகிகளும் வந்து, உங்கள் நாட்டு மழையை இங்கே கொண்டு வந்து விட்டீர்கள்" என்றார்களாம். "ஆமாமாம். எங்கள் ஊரில் கூட மழையே இல்லை" என தபால் வந்திருக்கிறது என்றாராம்.

ஒரு ஆட்டையும் அதன் குட்டியையும் ஒரு சிறிய அறையில் கட்டி வைத்திருந்தார்களாம். அந்த அறையில் மழை வெள்ளம் கூடுதலாக இருந்ததால் ஆட்டை வேறு இடத்தில் கட்டச் சொல்லி இருக்கிறார்கள். மேலே ஒரு துணியை போர்த்திக் கொண்டு முதலில் குட்டிகளை கொண்டு வந்து விட்டு விட்டு, ஆட்டை இழுத்துக் கொண்டு வெளியில் வரவும், அவர் பின்னாலேயே அந்த அறை அப்படியே நொறுங்கி உட்கார்ந்ததாம். அரபியின் முகம் வெளிறிப் போய் பயந்து கத்தவும், திரும்பிப் பார்த்தவுடன்தான் தெரிநததாம். இரண்டு நாளைக்கு இரண்டு பேருமே காய்ச்சல் வந்து எழவில்லையாம்.

சரி நேற்றைய கதையை பார்ப்போம்.

மழை வருவதற்கு முன் வானம் மேக மூட்டமாய் இருக்குமாமே. அதற்கு இப்படியா?


மேகம் திரண்டு......
அடேங்கப்பா! என்னய்யா அது?


என்னது இங்க கூடவா?
யாரோ காரின் மேல் கல்லெடுத்து போடற மாதிரி இருக்கிறதே
அடே! ஆலங்கட்டி டோய்!..!!


ஹய்யா! ரோடு பூரா சிறு சிறு பனிக்கட்டி
என்ன அழகு? காரை நிறுத்த முடியலியே




என்னப்பா இவ்வளவு ஜாலி?. வானத்துக்கும் பூமிக்குமா தாவுறே!.
கொஞ்சம் அடக்கு.


ஹய்! கண்ணாடியையே உடைச்சிடுச்சே!
செம ஸ்பீடுதான்!

ஏய்... என்னா? அடங்க மாட்டியா?


ஐயைய்யோ. இரண்டு இடத்துலே கண்ணாடி புட்டுகிச்சு.
போய்யா. நீங்களும் ஆலங்கட்டியும்

இன்ஸ்யூரண்ஸ்ல காரை எத்தனை நாள் நிப்பாட்டுவானோ?
பொழப்பு போச்சு. சே!

(படங்கள் உதவி: மொஹையதீன் அப்துல் காதர்)

Post Comment