Saturday 26 April 2008

நடந்ததும் நினைத்ததும் ஓ! உஃப்!!

சரி செய்ய முடியாத செயல்களில் நான்கு
1. சொல்லி விட்ட சொற்கள்
2. எறிந்த கல்லால் ஏற்பட்ட அலை
3. தவற விட்ட வசந்தம்
4. இழந்து விட்ட நேரம்

ஒரு ஹைடெக் இளம்பெண் விமானத்தில் பயணிப்பதற்காக ஒரு பெரிய விமான நிலையத்தின் பயணிகள் அறையில் தங்க நேர்ந்தது.


பல மணி நேர தாமதம் ஏற்படலாமென அறிந்த அவள், நேரப்போக்குக்காக ஒரு புத்தகத்தையும் ஒரு பிஸ்கட் பேக்கையும் வாங்கிக் கொண்டு, அமைதியாக படிப்பதற்காக மிக முக்கியமானவர்கள் தங்கும் நிலைய பயண அறையில் ஒரு கைநாற்காலியில் அமர்ந்தாள்.


அவள் இருந்த இருக்கையின் அருகே பிஸ்கட் பாக்கெட் வைக்கப்பட்டிருந்த கைநாற்காலிக்கு அடுத்ததில் ஒருவர் அமர்ந்து தான் கையுடன் கொண்டு வந்திருந்த பத்திரிக்கையை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.

அவள் பிஸ்கட் பாக்கைப் பிரித்து ஒன்றை எடுத்தவுடன் அடுத்து அமர்ந்திருந்தவனும் அதிலிருந்து ஒன்றை எடுத்துக் கொண்டான். பயங்கரமாக கோபம் வந்தாலும் ஒன்றும் பேசாமலே இருந்தாள். ஆனால் அவள் மனதில் 'எவ்வளவு கொழுப்பு இவனுக்கு!. இதே வேறு நேரமாயிருந்தால், இவனுடைய இந்தத் திமிருக்கு அவன் மூஞ்சியிலே ஒரு குத்து விட்டிருப்பேன்' என நினைத்தாள்.

அவள் ஒவ்வொரு முறை பிஸ்கட் எடுத்த போதும் அவனும் ஒன்றை எடுத்து சாப்பிட்டான். அது அவளை பயங்கரமாக எரிச்சலடைய வைத்தாலும் அந்த அசிங்கம் எல்லோருக்கும் தெரிய வேண்டாமே என சகித்துக் கொண்டாள்.

இப்போது ஒரு பிஸ்கட்தான் மீதம் இருந்தது. 'இந்த வீணாய்ப் போனவன் இப்போது என்ன செய்ய முடியும்?' என நினைத்தாள். அவனோ அந்த பிஸ்கட்டை எடுத்து, இரண்டாய் உடைத்து, அவன் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, அவளிடம் ஒரு பகுதியைக் கொடுத்தான்.

சே! என்ன கொடுமை இது. அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. விசுக்கென்று அவ்விடத்திலிருந்து எழுந்து, அவள் புத்தகம் மற்ற பொருட்களை எடுத்துக் கொண்டு, விமானமேறும் பயணிகளின் வரிசையில் நின்று கொண்டாள்.


விமானத்தினுள் சென்று தனது இருக்கையில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். தான் போட்டிருந்த கண்ணாடியைக் கழற்றி வைக்க கைப்பையை திறந்தால் ஆச்சர்யம். உளளே அவளுடைய பிஸ்கட் பாக்கெட். திறக்கப் படாமல் - அப்படியே. தன் கைப்பையில் தான் வைத்த பிஸ்கெட். அவள் தன்னையே நொந்து தன் தவறுக்காக அவமானமாய் உணர்ந்தாள்.


அந்த மனிதன் எந்தக் கோபமும் கசப்புமின்றி அவனுடைய பிஸ்கெட்டை இவளுடன் பகிர்ந்து உண்டிருக்கிறான். ஆனால் இவளோ இவளுடையதை அவன் பகிர்ந்து கொண்டதாக நினைத்து கோபம் மற்றும் வெறுப்பின் உச்சத்திலிருந்தாள்.

அவன் எந்த விமானத்தில் எங்கு செல்பவனோ?. அவனிடம் நடந்ததை விளக்கவோ மன்னிப்புக் கோரவோ கூட இயலாத நிலை.

அவசர குணம் வேண்டாமே.

----------------------------------------------------------------------

கோவையில் ஒரு வயதான மனிதர் தன் நிலத்தை கொத்தி காய்கனிச் செடிகளாவது வைக்கலாமே என்று தம் தோட்டத்திற்குச் சென்றார். நிலம் இறுகிக் கடினமாக இருந்ததில் அவரால் தோண்ட இயலவில்லை. அவருடன் எப்போதும் இப்பணியில் கூட வரும் ஒரே மகன் நிஜாம் இப்போது ஜெயிலில். தெருவில் போய்க் கொண்டிருந்த போது எவ்வித காரணமுமின்றி போலீஸ் பிடித்த தீவிரவாதி(?) அவன்.

அவர் தன் மகனுக்கு தன் நிலைமை குறித்து தபால் எழுதினார்.


புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.
அன்பு மகன் நிஜாமுக்கு,
எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.
இவ்வருடம் நம் தோட்டத்தில் எதுவும் பயிரிட முடியாதென்று கவலையுடன் உள்ளேன். தோட்டத்தில் தோண்டி, பண்படுத்தி, செடிகள் நட இயலாத அளவுக்கு மூப்படைந்து விட்டேன். நீ என்னுடன் இருந்திருந்தால், நீயே அவ்வேலைகளைச் செய்து கொடுத்திருப்பாய். எனக்கு இந்தக் கவலை ஏற்பட்டிருக்காது. இறைவன் நலமருள
பிரார்த்தனையுடன் உன் தந்தை.

சின்னாட்கள் கழித்து மகனிடமிருந்து தந்தைக்கு கடிதம் வந்திருந்தது.


புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.
அன்பு வாப்பாவுக்கு,
எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.
தற்போது தோட்டத்தை எங்கும் தோண்டி விடாதீர்கள். அங்குதான் பிணங்களை புதைத்து வைத்துள்ளேன்.
நன்மைக்கான பிரார்த்தனைகளுடன்
உங்கள் அன்பு மகன் நிஜாம்

அடுத்த நாள் விடியற்காலை 4மணி. உளவுத்துறை வட்டாரங்களுடன் பெரிய போலீஸ் படை அந்தத் தோட்டமெங்கும் தோண்டித் தோண்டிப் பார்த்தும் ஒரு பிணத்தையும் கண்டெடுக்க முடியாமல், முதியவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தோட்டத்தை விட்டு அகன்றது. அதே நாள் மகனிடமிருந்து முதியவருக்கு இன்னொரு கடிதம் கிடைத்தது.


புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.
அன்பு வாப்பாவுக்கு,
எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.
இப்போது தோட்டத்தில் உங்கள் விருப்பம் போல் பயிரிட்டுக் கொள்ளுங்கள்.
என் இந்த நிலைமையில் என்னால் இவ்வளவுதான் உதவ முடிந்தது.
நன்மைக்கான பிரார்த்தனைகளுடன்
உங்கள் அன்பு மகன் நிஜாம்

தழுவல்: நன்றி-ஷர்மி இரவி

Post Comment

மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு யோசனை

(குசும்பனுக்கும் மின்னுதுமின்னலுக்கும் அய்யனாருக்கும்)

ஒரு தம்பதியினரது 25 வருட வாழ்க்கையில் ஒரு முறை கூட இருவருக்கிடையில் சண்டையே வந்ததில்லை. அந்த ஊரிலேயே எல்லோராலும் பேசப்படுகிற ஆதர்ஸ தம்பதியினராய் இருந்தனர்.

அவர்களின் திருமண நாள் விழாவின் போது, உள்ளுர் பத்திரிக்கையாளர், "உங்கள் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையின் ரகசியமென்ன?" என்று கணவரிடம் கேட்டார்

அந்தக் கணவர் அவர்களது தேனிலவு நாளில் நடந்த நிகழ்ச்சியொன்றை அவருக்காக நினைவு கூர்ந்தார்

"நாங்கள் இருவரும் தேனிலவுக்காக சிம்லா போயிருந்தோம். அங்கிருக்கின்ற எந்த விளையாட்டை முதலில் தேர்ந்தெடுப்பது எனக் குழம்பி, கடைசியில் குதிரையேற்றத்திலிருந்து தொடங்குவது என்று முடிவெடுத்தோம்.

நான் ஒரு குதிரையிலும் என் மனைவி ஒரு குதிரையிலும் ஏறிக்கொண்டோம். எனக்கு கிடைத்தது நல்ல குதிரை. எந்த பிரச்னையும் தராமல் நல்லபடியாய் சென்றது.

ஆனால் என் மனைவிக்கு கிடைத்த குதிரை கொஞ்சம் சண்டித்தனம் செய்தது. ஒரு முறை திடீரென்று குதிரை குதித்ததில் என் மனைவி கீழே விழுந்து விட்டாள். என் மனைவியோ கொஞ்சம் கூட வருத்தப்படாமல், அதன் முதுகில் தட்டிக் கொடுத்து, 'முதல் தடவை. பரவாயில்லை' என்று குதிரையிடம் சொல்லி விட்டு திரும்ப ஏறி அமர்ந்து கொண்டாள்.

சிறிது தூரம் சென்றதும் மீண்டும் குதிரை குதித்து, என் மனைவியை கீழே தள்ளி விட்டது. என் மனைவியோ கொஞ்சம் கூட சினமில்லாமல், திரும்ப குதிரையிடம் வந்து 'இது உனக்கு இரண்டாம் தடவை' என்று சொல்லி விட்டு திரும்பவும் குதிரையில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

சிறிது தூரம் சென்று மூன்றாவது தடவையாக குதிரை குதித்து, என் மனைவி கீழே விழுந்ததும், அமைதியாக தன் கைப்பையைத் திறந்து தன் துப்பாக்கியை எடுத்து குதிரையைச் சுட்டுக் கொன்றே விட்டாள்.

வந்த இடத்தில் என்ன செய்வது எனத் தெரியாமல் நான் விழி பிதுங்கி, 'என்ன காரியம் செய்து விட்டாய்! ஒரு வாயில்லா ஜீவனை இப்படிக் கொன்று விட்டாயே! உனக்கென்ன பைத்தியமா?' என்று கோபமாகக் கத்தினேன்.

என் மனைவியோ கொஞ்சம் கூட கவலைப்படாமல், 'முதல் தடவைதானே. பரவாயில்லை' என்று அமைதியாக என்னிடம் கூறினாள்.

அவ்வளவுதான். அதற்கப்புறம் எங்கள் வாழ்வில் சிறு வாய்த்தகராறு கூட வந்ததில்லை."

(தலைப்பில் 'திருமதி' என்ற வார்த்தை மூன்று பேர் பெயருக்கும் முன்னால் சேர்க்க மறந்து விட்டது. அதனால் அந்தப் பெயர்களுக்கு முன்னால் 'திருமதி' என்ற வார்த்தையை சேர்த்து படிக்கக் கோருகிறேன்)

Post Comment

Thursday 24 April 2008

நம் மூளையோடு போட்டி

இது சோதனை ஒன்றுமில்லை. ஆனால்
அது அப்படித்தான்.
விபரங்கள் தரப்பட்டுள்ளது.


கீழே முக்கோணத்தில் எழுதப்பட்டதை சப்தமிட்டுப் படியுங்கள்


நீங்கள் "A BIRD IN THE BUSH" என்றுதானே படித்தீர்கள்?.
என்றால் 'THE' என்ற வார்த்தை இருமுறை வந்துள்ளதை நீங்கள் சரியாகப் பார்க்கவில்லையென்று பொருள்.
திரும்பப் பாருங்களேன்.

அடுத்து வார்த்தை விளையாட்டு

கீழே என்ன எழுதியிருக்கிறது?

கருத்த எழுத்துக்களில் GOOD என்று எழுதியிருப்பதுடன் கருத்த எழுத்துகளினுள் EVIL என்ற வார்த்தை வெள்ளை எழுத்துகளில் உள்ளது.
அதாவது நன்மையினுள் தீமை ஒளிந்திருக்கிறது
அல்லது
நன்மை மறையுமிடத்து தீமை வரும்.
சரிதானே.


முதலில் சரியாகத் தெரிந்திருக்காது. வெள்ளை எழுத்துக்களில் 'OPTICAL' என்றுள்ளது. பின்னாலுள்ள ஊதா நிறப்படத்தில் 'ILLUSION' என்று எழுதப்பட்டிருக்கிறது.
இப்போது பாருங்கள். அதனால்தான் இந்த வண்ண ஓவியத்திற்கு 'Optical Illusion' என்பது பெயர்.

கீழே நீங்கள் பார்ப்பது என்ன?


இதில் ஒரு சிறிய தந்திர வேலை உள்ளது.
'Teach' என்ற வார்த்தை 'Learn' என்று பிரதிபலிக்கிறது

கடைசியாக
கீழே உள்ளதில் என்ன பார்க்கின்றீர்கள்'


பழுப்பு நிறத்திலுள்ள 'Me' தெரிகிறதா
அல்லது
'என்னில் உங்களை'ப் பார்க்க முடிகிறதுதானே. 'Me in You'

அடுத்து கண் சோதனை
இதில் எத்தனை 'F' உள்ளது எனக் கூட்டுங்கள்

FINISHED FILES ARE THE RE
SULT OF YEARS OF SCIENTI
FIC STUDY COMBINED WITH
THE EXPERIENCE OF YEARS...

(கீழே வாருங்கள்)

எத்தனை?
தவறு. மொத்தம் 6 உள்ளன. - அட.. உண்மையில்தாங்க
திரும்ப படித்து கூட்டிப் பாருங்கள்

என்ன புரியவில்லையா?
நம் மூளை 'OF' என்ற வார்த்தையிலுள்ள 'F'ஐ கூட்டுவதில்லை.


இன்னும் மூளைக்கு வேலை
கேம்பரிட்ஜ் பல்கலை கழகத்திலிருந்து....
Olny srmat poelpe can raed tihs.
I cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdanieg. The
phaonmneal pweor of the hmuan mnid, aoccdrnig to a rscheearch at Cmabrigde
Uinervtisy, it deosn't mttaer in waht oredr the ltteers in a wrod are, the olny
iprmoatnt tihng is taht the frist and lsat ltteer be in the rghit pclae. The rset can be
a taotl mses and you can sitll raed it wouthit a porbelm. Tihs is bcuseae the huamn
mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe. Amzanig huh?
yaeh and I awlyas tghuhot slpeling was ipmorantt! if you can raed tihs put yuor comemnt dwon !!

என்ன பார்க்கிறீர்கள்.
மூளை முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் கொண்டே படித்து விடும்.

நன்றி: ஷர்மி ரவி

Post Comment

Tuesday 22 April 2008

இரண்டுமே அவள்தான்

எந்த ஒரு செயலையும் எவ்வித முன்முடிவுகளின்றி திறந்த மனதோடு அணுகும்போது அதிலுள்ள சாதக பாதக அம்சங்கள் இரண்டும் தெளிவாகும். இல்லையென்றால் நம் முன்முடிவுகளுக்கேற்பவே அச்செயல்கள் மாறித் தோற்றமளிக்கும்.

இப்போது கீழுள்ள முதல் படத்தை சில வினாடிகள் உற்றுப் பாருங்கள்.


.
.
.
.
.
.
.
.
.

பார்த்து விட்டீர்களா. இப்போது கீழேயுள்ள இரண்டாவது படத்தைப் பாருங்கள்.


இந்தப் பெண் ஆடம்பர உடையணிந்து காட்சியளிக்கிறாள். அவளுக்கு என்ன வயதிருக்கும்?.

எடுப்பான மூக்கும் அமைதியான தோற்றமும் உள்ள இனிமையான பெண். சுமார் 25 வயதிருக்கலாம் என்பீர்கள்.

நீங்கள் கூறியது தவறு என்கிறேன் நான்.


சந்தேகமிருந்தால் உங்கள் நண்பரை அல்லது மனைவியை அழைத்து கீழுள்ள மூன்றாவது படத்தை சில வினாடிகள் உற்று நோக்கச் செய்யுங்கள்.
.
.
.
.
.
.



பின்னர் இரண்டாவது படத்தைப் பார்த்து அந்தப் படத்திலுள்ள பெண்ணுக்கு என்ன வயதிருக்கும் என்று கேட்டுப் பாருங்கள்.
.
.
.
எப்படி?

முதலில் நீங்கள் ஒன்றாவது படத்தை பார்த்திருந்தால் இரண்டாவது படம் குமரியாகத் தெரியும்.

முதலில் மூன்றாவது படத்தை பார்த்து விட்டு இரண்டாவது படத்தைப் பார்த்தால் வயதான பெண்ணாகத் தெரியும்.

வ.வா.சங்க இரண்டாமாண்டு போட்டியில் சேர்த்தாச்சு.

Post Comment