Thursday 29 March 2007

வாழ்க்கை வாழ்வதற்கே

1. பணம் சம்பாதிக்கவென்று நம் உடல்நலத்தை இழக்கிறோம் பின்னர்
இழந்த உடல் நலத்தை சீராக்க பணத்தை செலவழிக்கிறோம்.

நமக்கு மரணமேயில்லை என்பதைப் போலலே வாழ்கிறோம் பின்னர்
நாம் வாழ்ந்ததேயில்லை என்பதைப் போல மரணிக்கிறோம்.

2. எனது உயர்நிலை பள்ளிப் படிப்பை முடிக்க முதலில் மரண ஓட்டம் அடுத்து கல்லூரி
பின் கல்லூரிப் படிப்பை முடிக்க மரண ஓட்டம் அடுத்தது வேலை
அதன் பின் திருமணம் மற்றும் குழந்தைப் பேற்றுக்கான மரண ஓட்டம்

நான் திரும்பவும் வேலைக்குச் செல்ல தடையேற்படுத்தாத வயது வரை,
என் குழந்தைகள் வளரவென்ற பாதையில் அதன்பின் மரண ஓட்டம்
பின்னர் ஓய்வை நோக்கிய மரண ஓட்டம்

இப்போது நான் இறந்து கொண்டிருக்கிறேன்
திடீரென நான் உணருகிறேன்- நான் உண்மையில் வாழ்வது என்பதையே மறந்து விட்டு இருந்திருக்கிறேன்.

3. மேற்சொன்னவை உங்களுக்கும் ஏற்படாவண்ணம் தயவுசெய்து பார்த்துக் கொள்ளுங்கள்
உங்கள் நிகழ்காலத்தை ஏற்றுக் கொண்டு, அதை பரிபூரணமாக அனுபவித்து,
ஒவ்வொரு நாளிலும் வாழுங்கள்

(நன்றி: நண்பர்கள் இரவி /ஷர்மிளா)

Post Comment

No comments: