Tuesday 24 February 2009

இந்தியாதான் முதல் இடத்தில்!!!


நம்மை விஞ்ச எந்த நாடும் இல்லை. அமெரிக்கா முதல் ஐந்து இடத்திற்குள் கூட இல்லை. இதை ஒலிம்பிக் போட்டியில் வைத்திருந்தால் தங்கப்பதக்கம் நமக்கே நமக்கு. அதை விட உலகத்திலுள்ள எல்லா நாடுகளும் சேர்ந்து கூட இந்தியாவை முந்த முடியவில்லையாம். நிரம்ப மகிழ்ச்சியா அல்லது இந்திய வறுமையைப் பற்றி நான் கிண்டலாக குறிப்பிடுவதாக எண்ணுகிறீர்களா?.

உலக நாடுகள் அனைத்தையும் சேர்த்தாலும் அதை விட கூடுதலாக சுவிஸ் வங்கிகளில் பணம் வைத்திருப்பது இந்திய நாட்டினர்தான். இரண்டாவதாக உள்ள ரஷ்யா இந்தியாவை விடவும் நான்கு மடங்கு குறைவு. என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?

உலக நாடுகள் கொடுத்த கெடுபிடிகளின் காரணமாக, தனது நாட்டில் கணக்கு வைத்திருப்போரின் தகவல்களைத் தர சுவிஸ்நாடு தற்போது தயாராக இருக்கிறது. ஆனால் அதை அந்தந்த அரசாங்கங்கள்தான் கேட்டுப் பெற வேண்டுமென நிபந்தனை விதித்துள்ளது.

நம் அரசு கேட்குமா? ஏன் கேட்காது என்பதற்கு காரணங்களை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? நம் அரசை கேட்கச் செய்ய நாம் அழுத்தமான இயக்கமாக இயங்க வேண்டும். இதை எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பது நல்ல இந்தியனின் முன்னுள்ள முக்கிய கடமை. நேர்மையான இந்தியரே! தார்மீகப் பொறுப்பு ஏற்க முன் வாருங்கள்.

இந்தியா ஏழை நாடா? யார் சொன்னது? சுவிஸ் வங்கிகளிடம் கேட்டுப் பாருங்கள். இந்திய கள்ளக் கணக்கு சொத்தின் மொத்த மதிப்பு 1500 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது இந்தியாவின் வெளிநாட்டுக் கடனை 13ஆல் பெருக்க வரும் தொகை. அதாவது 13 மடங்கு. இந்தப் பணத்தைக் கொண்டு 45 கோடி மக்களுக்கு, ஆளுக்கு ஒரு இலட்சம் தர இயலும். இப்போது சொல்லுங்கள் இந்தியா ஏழை நாடா?


இவ்வளவு பெரிய தொகையும் நேர்மையற்ற தொழிலதிபர்கள், ஊழல் அரசியல்வாதிகள், இலஞ்ச இலாவண்யத்தில் ஊறித் திளைக்கும் IAS, IRS, IPS அதிகாரிகள் ஆகியவர்களால் வைக்கப்பட்டுள்ளது. இவை மக்களைச் சுரண்டியதாலும் ஏமாற்றியதாலும் வந்தவை. சுரண்டப்படும் அந்த ஏழைக்குச் சொந்தமானவை. சிந்தியுங்கள்!!! அவை உனக்கும் எனக்குமானவை, இந்திய மக்களுக்குச் சொந்தமானவை!.

இந்தப் பணம் முழுதும் திரும்ப பெறப்பட்டால் 24மணி நேரத்துக்குள் இந்தியக் கடனை அடைத்து விடலாம். மிகுதியுள்ள 12மடங்கு தொகையையும் வருவாய் வரும் நல்ல வழிகளில் முதலீடு செய்தால், வரும் லாபம் மட்டுமே இந்திய அரசின் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் தொகையை விட கூடுதலாகும். எல்லா வரிகளையும் நீக்கி விட்டாலும் கூட இந்தியாவை சுலபமாக வழி நடத்த முடியும்.

"ஒரு ஆண்டில் சுமார் 80000 பேர் சுவிஸ் நாட்டுக்குப் போகிறார்கள். அவர்களில் 25000 பேர் அடிக்கடி போகின்றார்கள். இவர்களனைவரும் சுற்றுலாவுக்காக மட்டும் செல்லவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. வேறு என்ன காரணம்?" என்று தவறான பணப்புழக்கத்தை கண்காணிக்கும் துறையின் ஒரு அதிகாரி கேட்கிறார். அவர் கேட்பது, World Trade Organisationல் நடக்கும பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாக இருப்பதால் ஜெனீவாவுக்கு தொடர்ந்து போய் வந்து கொண்டிருக்கும் வணிக அமைச்சின் அரசதிகாரிகளைப் பற்றியதல்ல என்பது புரிகிறதா?.

நேர்மையற்ற தொழிலதிபர்கள், ஊழல் அரசியல்வாதிகள், இலஞ்ச இலாவண்ய அதிகாரிகள், கிரிக்கெட்காரர்கள், சினிமா நடிகர்கள், செக்ஸ் வியாபாரிகள், பாதுகாக்கப்பட்ட உயிரினக் காவலர்கள் போன்றவர்கள் இந்தியாவின் சொத்து சுகத்தை சூறையாடி எவ்வளவு குவித்துள்ளார்கள் என்பதை மேலும் படியுங்கள். இங்கே சொல்லப்பட்டிருப்பது சுவிஸ்நாட்டு கணக்கு மட்டும்தான். மற்ற வெளிநாட்டு வங்கி கணககுகள்??

சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்புப்பணம் பற்றிய Swiss Banking Association உடைய 2006ம் ஆண்டு அறிக்கையின் படி சுவிஸ் நாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள வெளிநாட்டவர் தொகை.


முதல் ஐந்து இடங்கள்:
1. இந்தியா - 1456 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
2. ரஷ்யா - 470 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
3. U.K. - 390 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
4. யுக்ரைன் - 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
5. சீனா - 96 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

மற்ற உலக நாடுகளிலுள்ளோர் வைத்துள்ள தொகையை கூட்டினாலும் இந்தியர்கள் வைத்துள்ள 1456பில்லியன் அல்லது 1.4 ட்ரில்லியன் டாலர்களைத் தொடுகிறதா? கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
.... அடுத்த பகுதியில் முற்றும்

Post Comment

24 comments:

சதுக்க பூதம் said...

புள்ளி விவரத்துடன் கூடிய நல்ல பதிவு. அடுத்த பகுதியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்

வடுவூர் குமார் said...

1456. ---புள்ளி கடைசில் தானே இருக்கு,தயவு செய்து மறுமுறை பார்த்திடுங்க.இதை தட்டச்சு செய்யும் போதே கையெல்லாம் நடுங்குதுங்க.:-)

கோவி.கண்ணன் said...

ஸ்விஸ்வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் கணக்கு விவரம் தரவில்லை என்றால் 10 ஆண்டு கடும்காவல் என்று சட்டம் இயற்றினால் சரியாகிடும்.

யார் செய்வது ? வேலிக்கு ஓனான் சாட்சி என்று சொல்வது போல் அரசியல்வாதிகள் தானே பணம் போட்டு வச்சிருப்பாங்க, அவங்க எப்படி இதைச் செய்வாங்க ?

சிலசமயம் யோசித்தால் மக்கள் ஆட்சியை விட சர்வாதிகாரம் பரவாயில்லையோன்னு தோணுது, அவன் ஒருத்தன் மட்டும் தான் 'அடிப்பான்' அடிப்பான்.

Anonymous said...

உள்நாட்டிலே சக மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடி வதைந்து கொண்டிருக்கையில, ஒரு சில படுபாவிங்க இப்படி அநியாயமா பணத்தை கொள்ளையடிச்சு எங்கேயோ கெடப்புல போட்டு வெச்சிருக்கானுங்களே! நாசமா போவ!!!

Anonymous said...

If we file a case in Supreme court, Definitly SC gives good judgement. Can we?

Unknown said...

//புள்ளி விவரத்துடன் கூடிய நல்ல பதிவு//
நன்றி சதுக்க பூதம்.
//அடுத்த பகுதியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்//
(இ.நா.)ஓரிரு நாளில்.

Unknown said...

//தட்டச்சு செய்யும் போதே கையெல்லாம் நடுங்குதுங்க.:-)//
நன்றி வடுவூர்குமார். கையே கூசுவதுதான் நடுங்குவது போல் தெரிகிறதோ? :)

Unknown said...

//ஸ்விஸ்வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் கணக்கு விவரம் தரவில்லை என்றால் 10 ஆண்டு கடும்காவல் என்று சட்டம் இயற்றினால் சரியாகிடும்.

யார் செய்வது? வேலிக்கு ஓனான் சாட்சி என்று சொல்வது போல் அரசியல்வாதிகள் தானே பணம் போட்டு வச்சிருப்பாங்க, அவங்க எப்படி இதைச் செய்வாங்க?//

வாங்க ஜிகே. உங்கள் தீர்வெல்லாம் சரிப்பட்டு வராது என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். இதை ஒரு மக்கள் இயக்கமாகத்தான் நடத்திக் காட்ட வேண்டும். தேர்தலை முன்னிறுத்திய போராட்டமாக அமைக்கலாம்.

//சிலசமயம் யோசித்தால் மக்கள் ஆட்சியை விட சர்வாதிகாரம் பரவாயில்லையோன்னு தோணுது, அவன் ஒருத்தன் மட்டும் தான் 'அடிப்பான்' அடிப்பான்//
ஆமாம். சில நேரங்களில் வெறுத்துப் போய், இது போலக் கூட யோசிக்கத் தோன்றுகிறது.:)

Anonymous said...

//Swiss Banking Association உடைய 2006ம் ஆண்டு அறிக்கையின் படி//

அதற்கான அதிகாரபூர்வ சுட்டியைத் தரவும்.

Unknown said...

//உள்நாட்டிலே சக மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடி வதைந்து கொண்டிருக்கையில, ஒரு சில படுபாவிங்க இப்படி அநியாயமா பணத்தை கொள்ளையடிச்சு எங்கேயோ கெடப்புல போட்டு வெச்சிருக்கானுங்களே! நாசமா போவ!!!//

நன்றி மாசிலா.
"பணத்தை கொள்ளையடிச்சு எங்கேயோ கெடப்புல போட்டு வெச்சிருக்கானுங்களே" பதிவின் முக்கியமான பாயிண்ட் இது.

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

பழமைபேசி said...

புள்ளி விவரத்துடன் கூடிய நல்ல பதிவு.

பாச மலர் / Paasa Malar said...

என்ன கொடுமை சார் இது.

Unknown said...

வருகைக்கு நன்றி பழமைபேசி, பாச மலர்.

Unknown said...

//If we file a case in Supreme court, Definitly SC gives good judgement. Can we?//
ஏன் அனானியாக வருகிறீர்கள்.
சப்ரீம் கோர்ட் நல்ல தீர்ப்பு தருமா? ஓரளவுக்கு நம்பிக்கைக்குரிய இடம்தான் என்றாலும் தொகை பெரியது எந்த புற்றில் எந்த பாம்போ? மக்கள் கோர்ட்டில் தீர்ப்புக்கு விடுவதுதான் சிறந்தது.
முயற்சிப்பதில் தவறில்லை.

//"Swiss Banking Association உடைய 2006ம் ஆண்டு அறிக்கையின் படி" அதற்கான அதிகாரபூர்வ சுட்டியைத் தரவும்//
Black Money In Swiss Bank ~ Swiss Banking Association report 2006
என்று கூகிளிடம் கேளுங்கள். இல்லையென்றால்
http://www.newstin.com/tag/us/56662854 போய்ப் பாருங்கள்.
அது சரி. இந்த விடயத்துக்குக் கூட அனானியாக வருவதன் மர்மம் என்னவோ?

கீழை ராஸா said...

என்னத்தை சொல்ல சுல்தான் பாய்...?

கோவி.கண்ணன் said...

ஐயா,

உங்கள் பதிவு யூத்புல் விகடனில் இணைக்கப்பட்டு இருக்கிறது.

http://youthful.vikatan.com/youth/index.asp

Unknown said...

நன்றி ஜிகே. உங்கள் பின்னூட்டத்துக்கு ஒரு நிமிடம் முன்னர்தான் சாட்டில் குசும்பனிடமிருந்து சுட்டியைக் கேட்டுப் பெற்று, பார்த்தேன்.

நிறைய மக்களை அடைய இது வாய்ப்பாகும். நன்றி யூத் விகடன்.

Anonymous said...

Ha ha ha

Nice image, Yes AP's Y S Raja Sekhar Reddy and Chandra Babu naidu are most currupted leaders in india.

Unknown said...

//Ha ha ha
Nice image, Yes AP's Y S Raja Sekhar Reddy and Chandra Babu naidu are most currupted leaders in india.//

Image பார்த்து சிரிக்கிறீங்க! அதன் சொந்தக்காரர் வாழ்க!.
இதிலுள்ள Message பார்த்து ஏதாவது செய்யணுங்க அனானி.

Unknown said...

//என்னத்தை சொல்ல சுல்தான் பாய்...?//
அதைத்தான் நானும் என்னத்த செய்ய என்று கேட்டிருக்கிறேன் கீழை ராஸா.

KARTHIK said...

// இதை ஒரு மக்கள் இயக்கமாகத்தான் நடத்திக் காட்ட வேண்டும். தேர்தலை முன்னிறுத்திய போராட்டமாக அமைக்கலாம்.//

இது பற்றிய செய்தி பலருக்கும் SMS செய்தியாக சேர்ந்திருக்கிறது.
ஆனால் என்ன செய்யனும்னுதான் யாருக்கும் தெரியல.
இது தொடர்பாக இரண்டு பேர் வழக்கு தொடர்ந்தாககூட செய்தி வெளியானாது (குமுதம் ரிப்போட்டரில்)ஆனா தற்ப்போதைய அவர்களின் நிலை பற்றி எதுவும் தெரியவில்லை.

நம்பிக்கை மட்டும் இருக்குங்க.விரைவில் இதுக்கு ஒரு முடிவு வரும்னு.

Maximum India said...

சிந்தனையைத் தூண்டும் நல்ல பதிவு.

தமிழில் உங்களைப் போன்ற சிறந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை அறியும் போது ஒரு பக்கம் வியப்பாகவும் மறு பக்கம் பெருமையாகவும் உள்ளது.

நன்றி.

Anonymous said...

இது நல்ல பதிவுதான்,
இந்த பூனைகளுக்கு யார் மணி கட்டுவது, இந்த தேசத்துக்கு எப்பொழுது விடிவு கால்ம்?