Thursday 13 August 2009

பயோனிக்ஸ் எனும் அறிவியல் அற்புதம்


பயோனிக்ஸ் என்ற இந்த வார்த்தை Jack E. Steel என்பவரால் 1958ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. இது கிரேக்க வார்த்தையான 'bion' (bee-on) என்ற வார்த்தையிலிருந்து உருப் பெற்றது. bion என்ற வார்த்தைக்கு (unit of life) 'உயிரின் ஓர் அலகு' என பொருள் வரும். 'ic' என்ற அசைக்கு 'போன்ற' (like OR in the manner of) என்ற பொருள் வரும். ஆக 'உயிரைப் போன்ற' எனப் பொருள் கொள்ளலாம்.

எது எப்படியோ மனிதனின் வேகமான வளர்ச்சிக்கு, அல்லது முயற்சிக்கு இந்த பயோனிக் ஒரு சான்று. இதை biomimetics, bio-inspiration, biognosis, biomimicry அல்லது bionical creativity engineering என்றும் சொல்கிறார்கள். வேறு சிலர் Biology + Eletronics என உண்டானது என்கிறார்கள்.

மருத்துவத்துறையில் பயோனிக்ஸ் என்பது வெளி மற்றும் உள் உடலுறுப்புகளின் சிதைவுகளை இயந்திர முறையில் சரி செய்து அதை பழைய முறையில் அல்லது அதை விட சிறப்பாக இயக்கும் தொழில் நுட்பமாகும்.

பயோனிக்ஸ் முறை இன்னும் அதன் துவக்க நிலையில்தான் இருக்கிறது என்றாலும் 'cochlear implant' மூலம் காது கேளாதவர்களை கேட்க வைக்க முடியும். அதாவது பயோனிக்ஸ் காதுகள். பயோனிக்ஸ் முறையின் மூலம் 2004ம் ஆண்டில் இயங்கும் ஒருமுழு இதயத்தையே செயற்கையாக உருவாக்கி காட்டினார்கள். புதிய நானோ தொழில் நுட்பம் மூலம் இதில் பல வியத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

பெனிசில்வேனியா பல்கலை கழகத்தின் பயோஇன்ஜினியரிங் துறையில் பணிபுரியும் Ghana நாட்டைச் சார்ந்த Kwabena Boahen என்ற பேராசிரியர் தம் எட்டு வருட கல்லூரி பணியில் மனித விழித்திரையை ஒத்த 'சிலிகான் விழித்திரை' ஒன்றை உருவாக்கி உள்ளார். காட்டுப் பல்லியின் கண்களின் இயக்க சிக்னல்களை அதில் அனுப்ப, கருப்பு வெள்ளையில் அதுவும் பார்ப்பதை நிரூபித்திருக்கிறார்.இதன் முன்னேற்றம் பற்றிV செய்தி இங்கே .

பயோனிக்ஸ் பற்றிய கூடுதல் செய்தி இங்கே கிடைக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கிளிக்குங்கள்.

இதுவரை மிக சீரியஸான விடயம். எனவே ஒரு சிறிய நகைச்சுவை.

கடவுள் சொர்க்கத்தில் வீற்றிருக்கிறார். அப்போது ஒரு விஞ்ஞானி வந்து "கடவுளே! இனி நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை. ஒன்றுமில்லாதவற்றிலிருந்து உயிரைப் படைக்கும் வித்தையை அறிவியல் கற்று விட்டது. அதாவது நீங்கள் ஆரம்பத்தில் செய்ததை இப்போது நாங்களும் செய்வோம்" என்றாராம்.

"ஓஹோ! எப்படி? சொல்!" என கடவுள் கேட்டாராம்.

"அதாவது வெறும் மண்ணிலிருந்து உம் சாயலில் ஒரு உருவைச் செய்து, அதில் சுவாசத்தை நிரப்பி மனிதனாக்கி விடுவோம்" என்றாராம் விஞ்ஞானி.

அதற்கு கடவுள் "அடடே! அப்படியா? எங்கே செய்து காட்டு!" என்றாராம்.

எனவே விஞ்ஞானி குனிந்து மண்ணை எடுத்து ஒரு உருவை செய்யத் துவங்கினாராம்.

அதைப் பார்த்த கடவுள், "பொறு! பொறு! நிறுத்து!. முதலில் நீ உன்னுடைய சொந்த மண்ணை எடுத்து வா!" என்றாராம்.

Post Comment

3 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல தகவல் ஐயா!

நன்றி.

Unknown said...

வருகைக்கு நன்றி ஜமால்

Muruganandan M.K. said...

நல்ல தகவல். அதற்கு மேல் மனிதனின் சொந்த மண் நகைச்சுவை அபாரம்.