Thursday 14 October 2010

பொம்மை - ஒரு நெஞ்சுருகும் நிகழ்வு

பெரிய கடைத்தெருவில் ஏதோ சாமான் வாங்க போயிருந்தேன். ஒரு கடையில் ஒரு ஐந்தாறு வயது மதிக்கத்தக்க சிறுபையனிடம் அந்தக் கடையின் கேஷியர் விவாதம் செய்து கொண்டிருந்தார். 'இந்த பொம்மையை வாங்குவதற்கு உன்னிடம் உள்ள காசு போதாது தம்பீ.'

அந்தப் பையன் என் பக்கம் திரும்பி 'என்னிடம் இருக்கும் இந்தக் காசுகள் நிச்சயம் பத்தாதா மாமா?' என்று கேட்டான். நான் அந்தக் காசுகளை வாங்கி எண்ணிப் பார்த்துவிட்டு, 'இது அந்த பொம்மை வாங்க பத்தாதய்யா' என்றேன். ஆனாலும் அந்தப் பையன் பொம்மையை கீழே வைக்கவில்லை.

நான் அந்தப்பையன் அருகில் சென்று 'நீ இந்த பொம்மையை யாருக்காக வாங்கப் போகிறாய்?' என்று கேட்டேன். 'இந்த பொம்மையை என் தங்கை மிகவும் விரும்பி தனக்காகக் கேட்டாள். நான் இதை அவள் பிறந்த நாளுக்காக பரிசளிக்கப் போகிறேன்' என்றான். 'நான் இதை என் மம்மியிடம் கொடுத்து விடுவேன். என் மம்மி என் தங்கையிடம் போகும்போது கொடுத்து விடுவார்கள்' என்றான். அதைச் சொல்லும்போது அவன் கண்களில் அப்படியொரு சோகம். 'என் தங்கை கடவுளிடம் போய் விட்டாள். எங்க டாடி சொன்னாங்க எங்கம்மாவும் சீக்கிரம் கடவுளிடம் போயிடுவாங்களாம். அதனால்தான் மம்மியிடம் கொடுத்தால் என் தங்கையிடம் கொடுத்திருவார்கள்' என்றான்.

என் இதயம் செயலிழந்து விட்டதைப்போல் உணர்ந்தேன். அந்தப் பையன் என்னைப் பார்த்து 'எங்க டாடியிடம் மம்மியை நான் கடைக்கு போயிட்டு வருவதற்குள் போக வேண்டாம்னு சொல்லுங்க என்று சொல்லி விட்டு வந்திருக்கிறேன்' என்றான்.
அந்தப் பையன் அழகாய் சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோ ஒன்றையும் காட்டினான். 'என் தங்கை என்னை மறக்காமல் இருக்க மம்மியிடம் இந்த போட்டோவையும் கொடுத்தனுப்பப் போகிறேன். எனக்கு மம்மியை ரொம்ப பிடிக்கும் அவர்கள் என்னை விட்டுவிட்டு போகக்கூடாது என்றுதான் நான் சொல்கிறேன். ஆனால் டாடிதான் என் தங்கையுடன் இருப்பதற்காக அவர்கள் போகப் போவதாக சொல்கிறார்' என்று சொல்லிவிட்டு அந்த பொம்மையை அமைதியாக சோகத்துடன் பார்த்தான்.

நான் உடனே என் பர்சை எடுத்துக் கொண்டு, 'அப்படியானால் நாம் இன்னொரு தடவை உன்னோட பணம் போதுமா என்று எண்ணிப் பார்ப்போமா?' என்றேன். 'ஓகே! இந்த பணம் போதுமேன்றுதான் நினைக்கிறேன்' என்றான். அவனுக்குத் தெரியாமல் என் காசுகளை அதில் கலந்து விட்டு எண்ணினேன். பொம்மைக்குப் போக மீதமும் இருந்தது. அவனிடம் சொன்னேன்.

'என்னிடம் போதுமான அளவுக்கு பணம் இருக்கச் செய்த கடவுளுக்கு நன்றி' என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து 'நான் நேற்று படுக்கப் போவதற்கு முன், என் தங்கைக்கு இந்த பொம்மை வாங்கி அனுப்ப போதுமான பணம் என்னிடம் இருக்கச் செய் என கடவுளிடம் கேட்டு விட்டுத்தான் படுத்தேன். அதுதான் கொடுத்திருக்கிறார்' என்றான்.
'எங்க மம்மிக்கு ஒயிட் ரோஸ் ரொம்ப பிடிக்கும் அதனால் அவர்களுக்கு ஒரு ஒயிட் ரோஸ் வாங்கித் தரனும் என்று அப்போதே நினைத்தேன். ஆனால் கடவுளிடம் ரொம்ப கேட்க வேணாமே என்று விட்டுட்டேன். ஆனால் கடவுள் அதற்கும் சேர்த்தே செய்து விட்டார்' என்றான்.

கடையிலிருந்து வெளியேறும்போது என் நிலைமையே வேறாக இருந்தது. அந்த சிறுபையன் என் மனதிலேயே இருந்தான்.

அதன் பின்தான் இரண்டு நாள் முன்னே நான் உள்ளூர் செய்தியில் படித்தது நினைவுக்கு வந்தது. ஒரு குடிகார டிரைவர் ஓட்டி வந்த ட்ரக், இளம் பெண்ணும் அவளுடைய பெண் குழந்தையும் பயணித்த காரின் மீது மோதிய விபத்தில் பெண் குழந்தை நிகழ்விடத்திலேயே இறந்து விட்டதோடு, அந்த இளம்பெண் கோமாவில் இருக்கிறாள் என்ற செய்தி. ஒருவேளை அந்த சிறுவன் இந்த இளம் பெண்ணின் மகனாய் இருக்குமோ?

சிறுவனை சந்தித்ததன் பின், இரண்டு நாள் கழித்து, அந்த இளம்பெண் இறந்து விட்டாள் என்று செய்தி வெளியாகி இருந்தது. உடனே கொஞ்சம் ஒய்ட் ரோஸ் வாங்கிக் கொண்டு உடல் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு சென்றேன். அங்கு அந்த இளம் பெண்ணின் உடல் சவப்பெட்டியில் வைக்கப் பட்டிருந்தது. அதன் கையில் அழகான வெள்ளை ரோஜா அந்த சிறுவனின் போட்டோவுடன். அதன் மார்புக்கு மேல் அந்த பொம்மை வைக்கப் பட்டிருந்தது. மிகவும் கனத்த மனதுடன் கண்ணீருடன் என் வாழ்வே மாறிப் போன உணர்வுடன் அங்கிருந்து வெளியேறினேன்.

அந்த சிறுவனையும், அவன் தன் தாயின் மீதும் தன் தங்கையின் மீதும் கொண்டிருந்த அன்பும் என்னால் எப்போதும் மறக்க இயலாதது. ஒரு கண நேரத்தில் ஒரு குடிகார காரோட்டியால் அவையாவும் பறிக்கப்பட்டு விட்டது.

தயவுசெய்து குடித்து விட்டு காரோட்டாதீர்கள்.
(இந்நிகழ்வு ஆங்கிலத்தில் எங்கிருந்தோ படித்தது)


சாலை விபத்துகளில் உயிரிழப்பிற்குரிய காரணங்களில் முக்கியமானவை
போதை மருந்துகள்,
மது பானங்கள் மற்றும்
அதீத சோர்வு !!!

Post Comment

20 comments:

பொன் மாலை பொழுது said...

உண்மைதான். மது அருந்தினால் வாகனங்கள் கையாள்வது முற்றிலும் முட்டாள் தனம்தான்.
பகிவுக்கு நன்றி

ராமு said...

@->-
@->-
@->-

சென்ஷி said...

:-(

கிளியனூர் இஸ்மத் said...

அருமையான பதிவு

Unknown said...

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கக்கு-மாணிக்கம், ராமு, சென்ஷி, இஸ்மத் பாய்.

மஸ்தூக்கா said...

படித்து முடித்ததும் கண்களில் கசிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் வழக்கம் உடையவர்கள் இதைப்படித்து விட்டுத் திருந்தட்டும்

Kousalya Raj said...

மனதை நெகிழ செய்துவிட்டது.....! குடிபழக்கம் குடித்தவர் குடியை மட்டும் கெடுக்காமல் அடுத்தவரின் வாழ்க்கையையும் கெடுத்து விடுகிறது....இதில் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது பெரிய தவறு....! நல்ல பகிர்வு...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

நெஞ்சை நெகிழவைக்கும் சம்பவம்...

தங்களின் தமிழாக்கம் உணர்வுப்பூர்வமாய் இருந்தது.

குடி பல குடியை கெடுக்கிறது.

Unknown said...

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மஸ்தூக்கா,Kousalya,முஹம்மத் ஆஷிக்.

வல்லிசிம்ஹன் said...

குடியினால் தன் குடும்பத்தை மட்டும் கொல்பவர்கள் இருக்கிறார்கள். இந்த வண்டியோட்டி இன்னோடு குடும்பத்தையும் சோகத்தில் மூழ்க வைத்துவிட்டார். இதற்குத்தான் விடிவு எங்க இருக்கு என்றுதான் தெரியவில்லை.

Asiya Omar said...

தேவையான பகிர்வு.நானும் மெயிலில் படித்திருக்கிறேன்.

Unknown said...

வாங்க வல்லிசிம்ஹன் அம்மா. தங்கள் வரவிற்கும் கருத்துரைக்கும் நன்றியம்மா.

நன்றிங்க ஆசியா உமர்

ராஜவம்சம் said...

ரொம்பவும் வருத்தமான சம்பவம்.

அன்புடன் மலிக்கா said...

தவறென்று தெரிந்தும் தவறும் மனிதன் தன்னிலை மறப்பதால்.
தனக்கும் கேடு தன்னைச்சர்ந்தவர்களுக்கும் கேடு என்பதை உணரும்போதுமட்டும்தான். இத்தவறுகளிலிருந்து திருந்தமுடியும்.

படித்ததும் மனம கனத்தது.

Unknown said...

தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

அருமையான கதை. உரைப்பவர்களுக்கு உரைத்தால் அது உங்கள் பதிவுக்கு கிடைத்த வெற்றி.

tasmac க்கில் வாகனத்தில் வருபவர்களுக்கு மது விற்கக்கூடாது என்று முதலில் அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

Jaleela Kamal said...

நெகிழ்வான விழிப்புணர்வு பதிவு

படிக்க படிக்க ரொம்ப கழ்டமா இருந்தது.

VANJOOR said...

இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.


**** ஆதாமின்டே மகன் அபு *****


.

ஸாதிகா said...

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தி உள்ளேன்.பாரவை இட்டு தங்கள் மேலான கருத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள்.

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

புதிய வரவுகள்:அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்,கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்

எனது தள கட்டுரைகளில் சில:
அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்,பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com