Sunday, 13 January 2008

உங்கள் கைப்பேசியில் ICE போடுவது அவசியம்.

சாதாரணமாக யாரும் நமக்கு எந்த கெடுதலோ விபத்தோ வரக்கூடாதென்றுதான் நினைப்பார்கள். சிலர் நமக்கெல்லாம் அப்படியெதுவும் நேர்ந்து விடாதென்றும் இருப்பார்கள். ஆனால் எதுவும் சொல்லிக் கொண்டு வருவதில்லையே.

“கால் மணி நேரம் முன் என்னிடம் நன்றாக பேசி விட்டுத்தான் போனார். அதற்குள்ளாக விபத்து என்று சொல்கிறார்கள்”,
“இரவு வீட்டுக்குப் போகுமுன் என்னிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். விடிந்ததும. இறந்து விட்டதாக செய்தி வருகிறது”
என்றெல்லாம் எத்தனை பேர் சொல்லக் கேட்டிருக்கிறோம். நமக்கும் அது போல் நேரலாம் என்பதாக முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது.

இப்போது வெகு சாதாரணமாக கைப்பேசி பழக்கத்தில் வந்து விட்டது. வெளியில் நடமாடும் எல்லோரது கைகளிலும் சாதாரணமாக கைப்பேசி உபயோகத்தை காணமுடிகிறது.

விபத்து நடந்து விட்டால், விபத்தில் பாதிக்கப்பட்டவரது கைப்பேசியில் கடைசியில் தொடர்பு கொண்ட எண்ணை (Last Dialed Number) அழைப்பது காவல் துறையினரிடம் சாதாரண பழக்கத்தில் உள்ளது. ஆனால் அது எப்போதும் உபயோகமாகத்தான் இருக்கும் என்று சொல்ல முடிவதில்லை. உறவினர்களுக்குத் தகவல் சொல்லவும், பாதிக்கப்பட்டவரது இரத்த குரூப், ஒவ்வாமை தகவல்கள், நோய்கள் பற்றிய விபரம் அறிவதிலும் நீண்ட தாமதங்கள் ஏற்பட்டு மரணத்திலும் முடிவதுண்டு.

எனவே நமது கைப்பேசியில் அவரவர்கள் ‘ICE - In Case of Emergency’ என்று ஒரு பெயரை வைத்து, அதில் ஒன்று, இரண்டு என்று நம்மைப் பற்றிய விபரம் அறிந்தவர்கள், முக்கிய தகவல் தெரிவிக்கப்பட வேண்டியவர்கள் ஆகியோரது எண்ணை குறிப்பிட்டு வைக்க வேண்டியது அவசியம்.
அது அவசர நேரத்தில் எல்லோருக்கும் மிக உதவியாக இருக்கும்.
தெரிந்திருந்தும் செய்யாமல் விட்டிருந்தால் உடனே ICE போடுங்கள்.

தேவையேற்படாமல் இருக்க பிரார்த்திப்போம்.
தேவையேற்பட்டால்….
பின்னர் வருத்தப்பட்டாலும் உபயோகமில்லாது போகும்.

Post Comment

Wednesday, 26 December 2007

பெண் வாகன ஓட்டிகளுக்கு விருது

பத்து போட்டியாளர்களில் விருதுக்கு தேர்நதெடுக்கப்பட்ட மூவரையும் கவனித்தீர்களா?

சரியான போட்டி
சரியான தேர்வா?

10வது பரிசு


9வது பரிசு


8வது பரிசு


7வது பரிசு


6வது பரிசு


5வது பரிசு


4வது பரிசு


வெண்கலம் வென்றவர்

என்ன ஏதும் விளங்கலையோ?
தலைக்கவசத்தை திருப்பி போட்டுக் கொண்டு.....

வெள்ளி வென்றவர்


தங்கம் வென்றவர்

எப்படி ஓட்டியிருக்கிறார் பாருங்கள். தானும் தப்பிக் கொண்டார். வண்டியையும் ஓரளவோடு தப்பிக்க வைத்து விட்டார். தங்கத்துக்கு தகுதியானவர்தானே.

நன்றி: ரவி ஷர்மி

Post Comment

Saturday, 22 December 2007

அழியும் (மருத்துவ) நம்பிக்கைகள்

காலங்காலமாக நம்பப்பட்ட ஏழு மருத்துவ நம்பிக்கைகளைப் பற்றி ஆய்ந்த இரண்டு அமெரிக்கர்கள் தங்களின் ஆய்வு முடிவுகளை அமெரிக்கன் ஜேர்னல் ஆப் ஸைக்காலஜி (American Jouranl of Psychology)ல் வெளியிட்டனர். அது நேற்று கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியிடப்பட்ட பிரிட்டிஷ் மெடிக்கல் ஜேர்னலில் (British Medical Journal) வந்துள்ளது.

1. நாளொன்றுக்கு குறைந்தது எட்டு குவளையாவது நீரருந்துதல் வேண்டும்.
இது பற்றி பலவாறு நாம் கேட்டிருந்தாலும் அதை நிரூபிக்கும் எந்த அறிவியல் சான்றுகளும் இதுவரை இல்லை.

2. மங்கலான வெளிச்சத்தில் படிப்பது பார்வைக் கோளாறை ஏற்படுத்தும்.
இத்துறை சார்ந்த அறிஞர்களில் பெரும்பாலோர் அவ்வாறு படிப்பது நிரந்தர பார்வைக் குறைவை ஏற்படுத்தும் என்பதை மறுக்கின்றனர். மாறாக சாதாரணமாக பார்க்க முடிவதை கூட கண்கணை சுருக்கி பார்த்தல், அடிக்கடி கண் சிமிட்டுதல் மற்றும் கூர்ந்து நோக்க இயலாமை போன்ற குறைபாடுகளைத் தரலாம் என்கின்றனர்.

3. முடிகளை மழித்தால் அடர்த்தியாகவும் வேகமாகவும் திரும்ப வளரும்.
ஆய்வு முடிவுகளின்படி, முடிகள் அடர்த்தியாகவும் வேகமாகவும் வளருவதற்கு, மழித்தலினால் எந்த நன்மையுமில்லை. மாறாக மிருதுவான மழிக்காத முடிகளை மழித்த பின்னான முடியின் அடிக்கட்டைகளுடன் பார்கக்கும்போது அடர்த்தியானது போல தோற்றமளிக்கும்.

4. வான்கோழி உண்பது மயக்க உணர்வைத் (Drowsy) தரும்.
வான்கோழியிலுள்ள ட்ரிப்டோபான் (tryptophan) எனும் அமினோ அமிலம் தூக்கம் மற்றும் மனோநிலையை கட்டுப்படுத்துவதில் பங்கு வகிக்கிறது. எனினும் அதிலுள்ள இந்த அமிலத்தின் அளவு சாதாரண கோழி மற்றும் அரைத்த மாட்டிறைச்சியில் உள்ள அதே அளவுதான். பெருநாட்களில் நாம் உண்ணும் மற்றும் பருகும் அதிகப்படியான உணவுதான் இந்த மயக்க உணர்வுக்கு காரணமாக இருக்கலாம்.

5. நம் முளையின் 10 சதவிகிதத்தை மட்டுமே நாம் உபயோகிக்கிறோம்.
இந்த நம்பிக்கை 1907ம் ஆண்டுகளிலேயே துவங்கி விட்டது. எனினும் இமேஜிங்(Imaging) முறையில் நோக்கும் போது, மூளையின் எந்தப் பகுதியும் உறக்கத்திலோ முழுதும் செயலற்றோ இல்லை.

6. இறந்த பிறகும் முடிகளும் நகங்களும் வளர்கின்றன.
இந்த நம்பிக்கை சில பேய்க்கதைகள் மூலம் பரவியிருக்கலாம். இறந்த உடலின் தோல்கள் காய்ந்து சுருங்கி விடுவதால் அதிலுள்ள நகங்களும் முடிகளும் நீண்டதாகத் தோற்றமளிக்கின்றன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

7. மருத்துவமனைகளில் கைப்பேசிகள் உபயோகிப்பது ஆபத்தானது.
இது குறித்த பலவாறாக வலியுறுத்தப் பட்டிருப்பினும், கைப்பேசிகள், மருத்துவ சாதனங்களை பாதிப்பதென்பது வெகுக்குறைவே.

இந்த ஆய்வுகள் ஆரோன் கரோல் (Aaron Carroll, an assisitant professor of paediatrics at the Regenstrief Institute, Indianapolis) மற்றும் ரேச்சல் ரீமேன் (Rachel Vreeman, fellow in children’s health services reasearch at Indiana University School of Medicine) என்ற இரு ஆய்வாளர்களால் செய்யப்பட்டது.

Post Comment