Monday 16 October 2006

குட்டையான மரம்


(இந்தக் கவிதை சரியாய் இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆகஸ்ட் மாதத்தில் எழுதியது)

பட்டுப் போன்ற அந்த மரம்
வானளாவிய உயரம்!
நான் பார்த்துப் பார்த்து பிரமித்த
மிகப்பெரும் உயரம்!.

இடையில் சின்னாட்கள்
ஏனோ என் விழியில்
அதன் உயரம் சுருங்கிச் சுருங்கிச்
சின்னதாய்
மிகவும் சிறுத்துப் போனது.

உயர்ந்த மரம் குறைந்ததற்காய் வருந்தினேன்.
வருந்தி வருந்தி என்னை வருத்தினேன்.
அந்த மரம் இவ்வளவு குட்டையாகிப் போனதே!!

சூழ்நிலை சத்தம் போட்டு என்னை விழிப்பித்தது.
அந்த மரம் தானாகவா குட்டையானது?
ஹூம்....
இதயமெல்லாம் பாழாய்ப் போன - அந்தப்
பூச்சிகளல்லா அதை சுருக்கியது.

தான் குட்டையாகிப் போவதை மரம் விரும்பவில்லை.
ஆனால் அது மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டதால்.....
தொடர்ந்து தாக்கப்படுவதால்......
குருகித் தீர வேண்டிய அபாயம்!
வேறு வழியில்லையதற்கு!!!

இப்போதும் வருந்துகிறேன்
அந்த மரம் குட்டையாகி விட்டதே!
பாவம்! அந்தப் பூச்சிகள்!
மரத்தைத் தாக்கச் சொன்னது யாராம்?
இந்தச் சூழ்நிலைதான்....

பூச்சியின் எண்ணம் போலவே
சாட்சிகள் அதன் பார்வைக்கு
சாதகமாகி விட்டதால் - அவை
திசையறியாமல் மீண்டும் மீண்டும்
மரத்தைத் தாக்குகிறது.

உயரத்தில் குறைந்தாலும்
இப்போது என் மரம்
உயரமாய்......
முன்னை விட கம்பீரமாய்.....
அழகாய்.......
என் கண்களுக்கு காட்சி தருகிறது!.

Post Comment

2 comments:

லொடுக்கு said...

நல்லாருக்கு!!!

தொடர்ந்து எழுதுங்கள்.

Unknown said...

நன்றி லொடுக்கு.

ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் தொடர்ந்து எழுத முயற்சிப்பேன்.