Tuesday 28 November 2006

ஆண்களே ஜாக்கிரதை - இதோ பெண்கள்!

இங்கே துபையில், சாதாரணமாக பெண்கள் ஓட்டும் கார்களின் பின்னாலும் டாக்ஸிகளின் பின்னாலும் கார் ஓட்டுவதை முடிந்தவரை தவிர்த்து விடுவேன். எல்லாம் அனுபவம் தந்த பாடம்தான்.

1. ஏதாவது டாக்ஸிக்கு பின்னால் போகும் போது வழியில் ஏதாவது பயணி நின்றால் பின்னால் வருபவரை கவனிக்காமல் படக்கென்று பிரேக் அடிப்பார்கள். தொழில் தர்மம் அப்படி.

2. ஆனால் பெண்கள் எதற்கென்றே தெரியாமல் அடிக்கடி வேகத்தை கூட்டுவார்கள் அல்லது குறைப்பார்கள். கார் ஓட்டும்போது முடிவெடுப்பதில் ஏற்படும் தாமதம் என நினைக்கிறேன்.

அ. சமீபத்தில் அபுதாபி சென்றிருக்கும்போது வேகமாக கார்கள் சென்று கொண்டிருக்கிறது. என் முன்னால் உள்ள அம்மணி சிக்னலைப் பார்த்ததோ (விளக்கு சிவப்பில் இல்லை) உடனே காரை அவசரமாக நிறுத்தி விட, பின்னாலிருந்து என் கார் அவர் காரை இடிக்க, என் பின்னால் வந்த கார் என் காரை இடித்து விட்டது. அரபி காவலர், அராபிய பெண் - எனக்கும் தண்டனை என் பின்னால் இடித்தவருக்கும் தண்டனை. உண்மையில் தப்பு செய்த அந்தம்மா தப்பித்துக் கொண்டது.

ஆ. இன்னொரு முறை துபையில் வேகமாகச் சாலையில் வந்து கொண்டிருக்கிறேன். சாலையின் பக்கத்தில் நின்றிருந்த கார் வேகமாகத் திரும்பி என் வண்டியில் இடித்தது. என் வண்டியின் ஓட்டுநர் பக்க கதவைத் திறக்க முடியாமல் எதிர்ப்புற கதவு வழி வெளியே வந்து பார்த்தால் இடித்த வண்டியின் பெண் ஓட்டநர் ஸ்டிரியரிங்கில் தலை சாய்த்து படுத்திருக்கிறது. எனக்கு பயமாகியதால் அந்த வண்டியின் கதவைத் திறந்து 'ஏதாவது உதவி தேவையா?' எனக் கேட்க 'ஒன்றுமில்லை. நான் என் சகோதரனுக்கு தொலை பேசுகிறேன். நீ காவலுக்கு தொலைபேசு' என்றது. காவல் வந்து நல்ல வேளை பெண்மணியின் மேல் தவறென்று பதிந்தது. ஆனால் (ஆம்புலன்ஸ்) அவசர உதவி ஊர்தி வந்தது. காவலிடம் என்ன ஆனது என்று பதட்டத்துடன் கேட்டால் 'கவலைப்படாதே! ஒன்றுமில்லை. நீ வெளியே வரத் தாமதமானதால் உனக்கென்னவோ என்று ஒன்றும் இரண்டும் வண்டியிலேயே ஆகிவிட்டதாக' சிரித்தார்.

ஆனால் கீழேயுள்ள பெண்ணைப் பாருங்கள். திறமையென்றால் இதுதான். என்ன சொல்றீங்க?

Who said women cant park the car

Post Comment

1 comment:

லொடுக்கு said...

ஆஹா!!! துபை ட்ராஃபிக்கை உண்டு/இல்லைன்னு ஆக்காம விடமாட்டீங்க போலிருக்கே!!