Monday 27 April 2009

வாயைக் கொடுத்துட்டு வாங்கி கட்டிக்காதீங்க

வீட்டில் விருந்தினர் இல்லாதிருந்தால், என் குடும்பத்தார் எப்போதும் தரையில் பாயில் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். எல்லோரும் உண்டு முடித்து எழுந்த பின்னரும் என் மகன் காலை நீட்டிக் கொண்டு முடிக்காமலே இருந்தான். ''என்னடா தம்பீ காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாயே! சாப்பாட்டுக்கு ஒரு மரியாதை இல்லையா? சீக்கிரம் முடித்து விட்டு எழு" என்றேன்.

"சரி டாடி. இனிமேல் சாப்பாட்டை, வாங்க சாப்பாடு! போங்க சாப்பாடு! உடகாருங்க சாப்பாடு! என்று மரியாதையாக சொல்கிறேன்" என்கிறான்.
என் தங்கமணியை அழைத்து "என்ன இவன் இப்படி பேசுகிறானே!" என்றேன். அதற்கவன், "டாடி பாருங்கள். முழங்கால்வரை ஒழுங்காக மூடி, இறைவனின் பெயர் கூறித்தான் துவங்கினேன். வேறென்ன சாப்பாட்டிற்குள்ள மரியாதை?" எனறான். தங்கமணியோ "சரிதானே! அவன் கிட்ட வாயைக் கொடுத்துட்டு ஏங்க வாங்கி கட்டிக்கறீங்க" என்கிறார்கள். என் மகனுக்கு அப்போது வயது எட்டு.


இப்போதுள்ள பிள்ளைகள் குசும்பனையே என்ன விலை என்று விலை பேசும் குழந்தைகளாக உள்ளனர். இது போல ஒரு தொடர் பார்ப்போமா?

சிறு குழந்தைகளுக்கு திமிங்கலம் பற்றி ஒரு ஆசிரியர் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். 'திமிங்கலம் ஒரு மிகப்பெரிய பாலூட்டிதான் என்றாலும் அது மனிதனை விழுங்க முடியாது. ஏனெனில் அதன் குரல்வளை மிகச்சிறியது'
ஒரு குழந்தை எழுந்து 'ஜோனாவை(நபி யூனூஸ்) திமிங்கலம் விழுங்கி இருக்கிறதே'
எரிச்சலடைந்த ஆசிரியர், 'இல்லம்மா. திமிங்கிலத்தால் மனிதனை விழுங்க முடியாது. அது சாத்தியமானதல்ல'

அதற்கந்த குழந்தை, 'நான் சொர்க்கம் போகும்போது அதை ஜோனாவிடம் கேட்பேன்'
அது கேட்ட ஆசிரியர், 'ஜோனா நரகத்தில் இருந்தால்....'
குழந்தை, 'அப்ப நீங்க கேளுங்க சார்'


ஒரு மழலையர் பள்ளி ஆசிரியை பிள்ளைகளை படம் வரையச் சொல்லி விட்டு அவ்வப்போது குழந்தைகள் எவ்வாறு வரைகின்றன என நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு குழந்தை வெகு சிரத்தையாக எதையோ வரைவதைப் பார்த்து விட்டு, 'நீ என்னம்மா வரைகிறாய்?' எனக் கேட்க 'நான் கடவுளை வரைகிறேன் டீச்சர்' என்றது.

சிறிது தாமதித்த ஆசிரியை, 'கடவுள் எப்படி இருப்பார் என்றுதான் யாருக்கும் தெரியாதே' எனச் சொல்ல
தன்னுடைய வரைதலினின்றும் தலையைக்கூட உயர்த்தாமல் அக்குழந்தை பளிச்சென்று சொன்னது
'இன்னும் இரண்டு நிமிடம் கழிந்த பின் எல்லோருக்கும் தெரிந்து விடும்'


தன் அம்மா சமையலறையில் வேலை செய்து கொண்டிருப்பதை கவனித்த ஒரு குழந்தை, 'ஏம்மா முழுதும் கருப்பாக உள்ள உன் முடியில் சில முடிகள் மட்டும் வெள்ளையாக இருக்கிறதே! அது ஏனம்மா?' எனக் கேட்க, அந்த அம்மா

'அது வந்து, எப்போதெல்லாம் நீ தப்பு செய்து என்னை கோபப்படுத்தி அழ வைக்கின்றாயோ, அப்போதெல்லாம் ஒரு முடி வெள்ளையாகி விடும்' என்றார்கள்.
இந்தப் புதிய அறிவைப் பற்றி சிறிது யோசித்த குழந்தை உடனே கேட்டது, 'அதனால்தான் பாட்டி முடி எல்லாமே வெளுத்து விட்டதா?'


உடலின் இரத்த ஓட்டத்தைப் பற்றி ஒரு ஆசிரியை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதை இன்னும் தெளிவு படுத்த, 'பிள்ளைகளே ! நான் இப்போது தலைகீழாக நின்றால் எல்லா இரத்தமும் என் தலைக்கு பாய்ந்து முகமெல்லாம் சிவந்து விடும்'
குழந்தைகள் எல்லாம் 'ஆமாம் டீச்சர்' என்றார்கள்.

'பின் ஏன் நான் நேராக சாதாரண நிலையில் நிற்கும் போது மட்டும் என் கால்களுக்குள் இரத்தம் பாய்ந்து கால்கள் சிவப்பதில்லை'
ஒரு பையன் எழுந்து சொன்னான் 'உங்கள் தலை போல, காலினுள்ளேயும் வெற்றிடம் இல்லை போலிருக்கிறது?'


ஒரு கிறித்துவ சிறார் பள்ளியின் உணவு இடைவேளையின் போது, மேசையின் தொடக்கத்தில் ஒரு தட்டில் ஆப்பிள்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த தட்டிற்கு அருகில் ஒரு குறிப்பும் வைக்கப்பட்டிருந்தது. ''ஒன்று மட்டும் எடுக்கவும். கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்''
அந்த சாப்பாட்டு வரிசையின் கடைசியில் ஒரு தட்டு நிறைய சாக்லெட்டும் பிஸ்கட்டுகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த தட்டிற்கு பக்கத்தில் ஒரு பையன் குறிப்பெழுதி வைத்தான்
''வேண்டும் வரையில் எடுத்துக் கொள்ளுங்கள். கடவுள் ஆப்பிளை பார்த்துக் கொண்டிருக்கிறார்''


பிள்ளைகளை வைத்து குழாம் புகைப்படம் எடுத்த பின்னர் ஆசிரியர் மாணவர்களுக்கு தனித்தனியாக ஒரு புகைப்படம் விற்க விரும்பி, ''எல்லோரும் இதை வாங்கிக் கொள்ளுங்கள். சில வருடங்கள் கழித்து பாருங்கள். அருந்ததீ வக்கீல் ஆயிடுச்சு, முஹம்மதும், வஹீதாவும் டாக்டர் ஆயிட்டாங்க, கலையரசன் பொறியியலாளன் என்று பேசினால் எவ்வளவு இனிமையாக இருக்கும்''.

பின்னாலிருந்து ஒரு பையன் ''இதிலிருக்கிற ஆசிரியர் இறந்துட்டார் என்றால் கூடவா? "

Post Comment

13 comments:

இப்னு ஹம்துன் said...

சுவையான நகைச்சுவைக் குறிப்புகள் சுல்தான் பாய்.

நன்றி

சென்ஷி said...

ஹா ஹா ஹா


அனைத்து துணுக்குகளுமே அருமை.

ரொம்ப நன்றி சுல்தான் ஜி...

எனக்கு ரொம்ப டச் பண்ணிய ஒண்ணு கடவுளை வரையற குழந்தைதான்..

பகிர்வுக்கு ரொம்ப நன்றி சார்!

கோவி.கண்ணன் said...

//வேறென்ன சாப்பாட்டிற்குள்ள மரியாதை?" எனறான். தங்கமணியோ "சரிதானே!//

அவன் சரியாகத்தானே சொல்லி இருக்கிறான். வணக்கத்துக்கு உரியவன் இறைவன் மட்டுமே என்று நீங்கள் அவனுக்குச் சொல்லிவிட்டு சாப்பாட்டிற்கு மரியாதை செய்யச் சொன்னால் ? செய்வானா ?

மரியாதையையும், வணக்கத்தையும் குழந்தைகள் குழப்பிக் கொள்கிறார் போலும்.

Unknown said...

வருகைக்கு நன்றி இப்னு ஹம்துன்.
நீண்ட நாட்களுக்குப் பின் நம்ம கடை பக்கம் வந்திருக்கின்றீர்கள்.

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சென்ஷி.

மங்களூர் சிவா said...

ஹா ஹா
நல்ல நகைச்சுவை தோரணம்.
:)

படகு said...

அனைத்து துணுக்குகளுமே அருமை.

சுவையான நகைச்சுவைக் குறிப்புகள்.

சூப்ப......ர்
:-))))))))))

Unknown said...

//அவன் சரியாகத்தானே சொல்லி இருக்கிறான்//
அதுதான் ஜிகே. சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னாலும், குழந்தைகள் பிடித்து உலுக்கி விடுகிறார்கள்.
சும்மா பேசவே இரண்டு தடவை யோசிக்க வேண்டி இருக்கிறது

//நல்ல நகைச்சுவை தோரணம் :)//
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மங்களூர் சிவா.

வடுவூர் குமார் said...

நல்ல குழந்தைகள் தான்.

Unknown said...

//அனைத்து துணுக்குகளுமே அருமை//
தங்களின் தொடர் வரவுக்கும்,ஊக்குவித்தலுக்கும், எப்போதும் போன்ற நீண்ண்ண்ண்ண்ண்ட சிரிப்பானுக்கும் நன்றி.

//நல்ல குழந்தைகள் தான்//
ஆமாங்க வடுவூர் குமார்.
இந்த பிள்ளைகளிடம் பார்த்து நிதானமாக யோசித்து தான் பேச வேண்டும்.

சிங்கையில் திரும்பவும் செட்டிலாகிட்டீங்களா?

விக்னேஷ்வரி said...

ஒவ்வொன்றும் அருமை. ரசிச்சு, ரசிச்சு படிச்சேன்.

cheena (சீனா) said...

அன்பின் சுல்தான்

அருமையான நகைச்சுவை பொதிந்த இடுகை. மழலையர் சில நேரங்களில் இப்படித்தான் கூறுகின்றனர்.

மிகவும் இரசித்தேன் - நல்வாழ்த்துகள்

Unknown said...

//ஒவ்வொன்றும் அருமை. ரசிச்சு, ரசிச்சு படிச்சேன்//
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிங்க விக்னேஷ்வரி

//மிகவும் இரசித்தேன் - நல்வாழ்த்துகள்//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி சீனா அய்யா

ALIF AHAMED said...

:)))


ஹி ஹி

சிறுவர்களிடம் வாய்யை கொடுக்க கூடாது :)